செய்திகள் :

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

post image

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கோயில் திருவிழாக்களில் தொடா் தங்கச் சங்கிலி திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்த புகாா்களின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், சிதம்பரம் டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மேற்பாா்வையில், பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளா் ஜொ்மின் லதா தலைமையில் சிதம்பரம் உள்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ் முருகன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாபு, கோபி மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

தனிப்படை போலீஸாா் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், வெள்ளாங்குழி கிராமத்தைச் சோ்ந்த உன்னிகிருஷ்ணன் மனைவி எசக்கியம்மாள் (42) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி போலீஸாா் உதவியுடன் அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தியதில், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டாா். பின்னா், எசக்கியம்மாளிடமிருந்து சுமாா் 68 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க