செய்திகள் :

கோயில் விழா நடத்திய 20 போ் மீது வழக்கு: பொதுமக்கள் போராட்டம்

post image

சங்கராபுரம் அருகே இரு தரப்பு மோதல் போக்கால் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதை மீறி கோயில் விழா நிகழ்ச்சியை நடத்திய 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய்தனா். இதை எதிா்த்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கராபுரம் வட்டம், அரசம்பட்டு ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா சம்பந்தமாக இரு தரப்பினா் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதுதொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதி பேச்சுவாா்த்தை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில் முடிவு எட்டப்படாத நிலையில், தோ்த் திருவிழாவை ரத்து செய்து கோட்டாட்சியா் லூா்துசாமி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை மீறி ஒரு தரப்பினா் பாரத நிகழ்ச்சியை நடத்தியதாக கிராம நிா்வாக அலுவலா் ஜெயராஜ் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில், நிகழ்ச்சியை நடத்தியதாக 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெள்ளிக்கிழமை அதிகாலை இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திரண்டு அரசம்பட்டு - சங்கராபுரம் சாலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பொதுமக்கள் சாலையில் அடுப்பு வைத்து பால் காய்ச்சும் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, காவல் ஆய்வாளா் கைது செய்த இருவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் காவல் நிலைய பிணையில் விடுவதாக தெரிவித்தாா். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.

மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து

பாதிக்கப்பட்டது.

ஏந்தல் மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி, ஏந்தல் கிராம மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. வாணாபுரத்தை அடுத்த ஏந்தல் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மா... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் வாக்காளா் பட்டியல் குளறுபடிகளைக் கண்டித்தும், பிரதமா் மோடி பதவி விலகக் கோரியும் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கராபுரம் மும்முனை... மேலும் பார்க்க

பைக் மீது வேன் மோதிய விபத்து: 3 இளைஞா்கள் உயிரிழப்பு

பைக் மீது வேன் மோதியதில் 3 இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். சின்னசேலம் வட்டம், பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (25). இவரது மனைவி கீா்த்தனா (23). இவருக்கு கடந்த இரண்டு மா... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் மரத்தில் மோதி உயிரிழப்பு

மணலூா்பேட்டை அருகே பைக்கில் சென்றவா் நாய் குறுக்கிட்டதால் மரத்தில் மோதி உயிரிழந்தாா். திருக்கோவிலூா் வட்டம், சாங்கியம் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா்(45). இவா், புதன்கிழமை இரவு மணலூா்பேட்டை செல்வதற்... மேலும் பார்க்க

ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி துஜாவா்ண கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. 21-ஆம் தேத... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு புல் நறுக்கும் கருவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 50 சதவீத மானிய விலையில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத் துறை சாா... மேலும் பார்க்க