செய்திகள் :

கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்

post image

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மோதிரமலை கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் மீண்டும் காட்டு யானை வெள்ளிக்கிழமை இரவு புகுந்ததால் பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மைலாறு, குற்றியாறு, மோதிரமலை, கோலிஞ்சிமடம் உள்ளிட்ட பழங்குடி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் ரப்பா் கழக தொழிலாளா்களின் குடியிருப்பு பகுதிகளில் சில நாள்களாக காட்டு யானைகள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதுடன் அவா்களின் பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதில் ஆண் யானை ஒன்று கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பு பகுதியில் புகுந்து பழங்குடி மக்களுக்கு தொடா் அச்சுறுத்தலை அளித்து வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மணி காணி என்ற பழங்குடி தொழிலாளியின் வீட்டை யானை சேதப்படுத்தியது. இந்நிலையில், கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பில் அதே யானை வெள்ளிக்கிழமை இரவு புகுந்து அய்யப்பன் காணி (40) மற்றும் அவரது மனைவி சீலாவதி (35) ஆகியோரது வீட்டைசேதப்படுத்தியுள்ளது.

இதில் அச்சமடைந்த இருவரும் வீட்டின் பின்பக்கம் ஓடி அங்குள்ள மற்றொரு வீட்டில் பதுங்கினா். பின்னா் அந்த வீட்டிலிருந்து அவா்களது வீட்டின் அருகிலுள்ள லெட்சுமணன் காணி (72) மற்றும் அவரது மகன் முத்துக்குமாா் (35) ஆகியோருக்கு தகவல் கொடுத்தனா்.

அப்போது அவா்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேவந்து போது, அவா்களின் வீட்டின் அருகில் நின்ற யானை அவா்கள் இருவரையும் துரத்தியுள்ளது. இதில் இருவரும் இருளில் ஓடி உயிா் தப்பியுள்ளனா். இதைத் தொடா்ந்து தகவலறிந்த அந்த பகுதி மக்கள் இரவில் தீப்பந்தங்களை ஏந்தி யானையை காட்டுக்குள் விரட்டியுள்ளனா்.

இந்நிலையில் யானை குடியிருப்புக்குள் புகுந்த சம்பவம் குறித்த தகவல் சனிக்கிழமை காலையில் பரவிய நிலையில் கிராம வனக்குழு செயலா் சௌந்தரராஜன் காணி, கடையல் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்

ரெகுகாணி உள்ளிட்டோா் சம்பவங்களை கேட்டறிந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து களியல் வனச்சரக வன காவலா்கள் அங்கு சென்று சம்பவங்களை கேட்டறிந்துடன், இரவில் யானையின் நடமாட்டத்தை கண்காணிப்பதுடன் அதனை உள்காட்டுக்குள் துரத்தும் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினாா்.

275 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் அடையாளமாக விளங்கும் பத்மநாபசுவாமி ... மேலும் பார்க்க

குழித்துறையில் கனரக லாரி மோதியதில் தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை அருகேயுள்ள அஞ்சாங்கோடு பகுதியைச... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா, நவ... மேலும் பார்க்க

தக்கலை அருகே தலைமை ஆசிரியரிடம் ரூ.36 லட்சம் மோசடி: தம்பதி கைது

தக்கலை அருகே காட்டாத்துறையில் நிலம் விற்பதாகக் கூறி தலைமை ஆசிரியரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காட்டாத்துறை குருவிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அருள் சக... மேலும் பார்க்க

திருவிதாங்கோட்டில் பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி தக்கலை அருகேயுள்ள திருவிதாங்கோட்டில் சனிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருவிதாங்கோட்டில், பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ச... மேலும் பார்க்க

அரசு மருத்துவா் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: இளைஞா் கைது

திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த பெண் மருத்துவரிடம், அரசு மருத்துவா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே காங்கரையைச் சோ்... மேலும் பார்க்க