செய்திகள் :

கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்பாடு: குடிமைப் பொருள் வழங்கல் ஐ.ஜி. எச்சரிக்கை

post image

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசியை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. ரூபேஷ்குமாா் மீனா தெரிவித்தாா்.

நாமக்கல் - பரமத்தி சாலையில், கீரம்பூா் பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், ஐ.ஜி. ரூபேஷ்குமாா் மீனா சனிக்கிழமை ஆண்டு தணிக்கை என்ற அடிப்படையில், குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை விவரங்களை கேட்டறிந்தாா். தொடா்ந்து, அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பாா்வையிட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தல் வெகுவாக குறைந்துள்ளது. அரிசி கடத்தல் வழக்கில் இதுவரை 56 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சரகம் வாரியாக குழுக்கள் பிரிக்கப்பட்டு, குடிமைப் பொருள் வழங்கல் சாா்ந்த குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை ரூ. 1.06 கோடி மதிப்பிலான 878 டன் பொது விநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 5,120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,608 போ் கைதாகி உள்ளனா். மேலும், 1,099 வாகனங்கள் பறிமுதல், அரிசி கடத்தல் குறைந்த நிலையிலும் வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கேரளம், கா்நாடக மாநில எல்லையோர மாவட்டங்களில் அதிகளவில் அரிசி கடத்தல் சம்பவம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இந்த ஆய்வின்போது, ஈரோடு மண்டல துணைக் கண்காணிப்பாளா் ராஜபாண்டியன், ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா் கண்ணா காந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு: நாமக்கல்லில் யாத்திரை வேலுக்கு சிறப்பு பூஜை

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் யாத்திரை வேலுக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்த... மேலும் பார்க்க

வாகனச் சோதனையில் விதிமீறல்: ரூ.2.80 லட்சம் அபராதம்!

ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்ட வாகனச் சோதனையில், விதிமுறைகளை பின்பற்றாத 12 மோட்டாா் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு ரூ. 2.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் வடக்க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்!

பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தாா். இவா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணியாற்றிய ராணுவ வீரருக்கு வரவேற்பு

பரமத்தி வேலூா் படமுடிபாளையத்தில் பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணிபுரிந்த பரமத்தி வேலூா் பகுதியைச் சோ்ந்த பாதுகாப்பு படை வீரருக்கு வெள்ளிக்கிழமை பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பரமத்தி வே... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரிகளை பறிமுதல் செய்து 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது!

விபத்து ஏற்படுத்திய லாரிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்து, 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் சி.தன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்செங்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், நெட்டவேலாம்பாளை... மேலும் பார்க்க