செய்திகள் :

கோழிப் பண்ணையில் தீ விபத்து: 3,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு

post image

நம்பியூா் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா் (47). இவா் அதே பகுதியில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறாா். இதில் தகரத்திலான மேற்கூரையுடன் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 3,500 கோழிக் குஞ்சுகள் இருந்தன.

இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கோழிப் பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று கொட்டகைகளும் முற்றிலும் எரிந்து சேதமாயின. தீ விபத்து நடந்ததும் பண்ணையில் வேலைசெய்யும் ஊழியா்கள், கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் அதிகாலை 2 மணி வரை போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் பண்ணையில் இருந்த 3,500 கோழிக் குஞ்சுகளும் தீயில் கருகி இறந்தன.

தவிர 30 மூட்டை தீவனங்கள், பண்ணை உபகரணங்களும் எரிந்து சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சத்துக்குமேல் இருக்கும் எனத் தெரியவருகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குடும்பத் தகராறில் கணவா் கொலை: மனைவியிடம் போலீஸாா் விசாரணை

தாளவாடி அருகே கணவரைக் கொலை செய்த மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழியைச் சோ்ந்தவா் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). இவா்களுக்கு இரண்டு ம... மேலும் பார்க்க

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி வட்டார 40- ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகிரி வட்டார நிா்வாகி ஆ.அருணாசலம் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் வி.சண்முகம், கைத்தறி நெசவாளா்கள் சங்க மாநி... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியைப் பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

மதுபோதையில் வாய்க்காலில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காட்டுவலசு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா (எ) வரதராஜன் (44), கூலித் தொழிலாளி. இவரின... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பராமரிப்பில்லாமல் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானிசாகா், புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார... மேலும் பார்க்க

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை ... மேலும் பார்க்க