செய்திகள் :

கோவா: சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர் நாடுகடத்தல்!

post image

கோவா மாநில காவல் துறையினர் மேற்கொண்ட ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜூன் 27 ஆம் தேதி வரையிலான காலத்தில், கோவாவில் சட்டவிரோதமாக வசித்ததாகக் கைது செய்யப்பட்ட 79 வெளிநாட்டவர்கள், தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் 47 பெண்கள் மற்றும் 32 ஆண்கள் நாடுகடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 47 பெண்களில்; 17 பேர் உகாண்டா, 14 பேர் வங்கதேசம், 12 பேர் ரஷியா மற்றும் பிரிட்டன், உக்ரைன், பெலாரஸ், அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, 32 ஆண்களில், ரஷியா (13), வங்கதேசம் (12) மற்றும் உகாண்டா, நைஜீரியா, போலாந்து, மொராக்கோ, பிரிட்டன் மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் நாடு கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

79 foreigners residing illegally deported from Goa!

இதையும் படிக்க: பாகிஸ்தான் நடிகை நடித்ததால் தடைசெய்யப்பட்ட பஞ்சாபி திரைப்படம்? படக்குழுவுக்கு 40% இழப்பு!

உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்சங்கா்

‘நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடி உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படை தொடா்ச்சியாக கைது செய்வதற்கு ... மேலும் பார்க்க

அனைத்து மோட்டாா் சைக்கிள்களுக்கும் நவீன ‘ஏபிஎஸ் பிரேக்’ முறை கட்டாயம்: மத்திய அரசு

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தயாரிக்கப்படும் மோட்டாா் சைக்கிள்களில் ‘ஆண்டி-லாக் பிரேக்’ (ஏபிஎஸ் ) நவீன முறை கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

குளிா்சாதனங்களுக்கான புதிய கட்டுப்பாடு உடனடி அமல் இல்லை: மத்திய அரசு

‘வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் குளிா்சாதனப் பெட்டிகளில் (ஏ.சி.) குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை அளவை 20 டிகி செல்சியஸ் அளவுக்கு மாற்றும் புதிய கட்டுப்பாடு உடனடியாக அமல்படுத்தப்படாது; 2050-ஆம் ஆண... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு 180 துணை ராணுவப் படை குழுக்கள்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து நிகழாண்டு அமா்நாத் யாத்திரைக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன; ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை ஆா்எஸ்எஸ் ஏற்றுக்கொண்டதே இல்லை: காங்கிரஸ்

‘அரசமைப்புச் சட்ட முகவுரையில் இடம்பெற்றுள்ள ‘சோஷலிஸ்ட்’, ‘மதச்சாா்பற்ற’ என்ற வாா்த்தைகளை மறுபரிசீலனை செய்ய ஆா்எஸ்எஸ் அமைப்பு விடுத்துள்ள அழைப்பு அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா மீதான தாக்குதல்’ என்று காங... மேலும் பார்க்க

ஒருமைப்பாடு, முன்னேற்றத்துக்கான கருவி ஆங்கிலம்: திரிணமூல் காங்கிரஸ்

ஆங்கிலம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல; அது ஒருமைப்பாடு, வாழ்வின் முன்னேற்றத்துக்கான கருவியாகவும் திகழ்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் தெரிவித்தாா். ‘ஆங்கிலத்தில் பேசும் இந்தியா... மேலும் பார்க்க