ஒருமைப்பாடு, முன்னேற்றத்துக்கான கருவி ஆங்கிலம்: திரிணமூல் காங்கிரஸ்
ஆங்கிலம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல; அது ஒருமைப்பாடு, வாழ்வின் முன்னேற்றத்துக்கான கருவியாகவும் திகழ்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் தெரிவித்தாா்.
‘ஆங்கிலத்தில் பேசும் இந்தியா்கள் வெட்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. நமது கலாசாரம், வரலாறு மற்றும் மதத்தை அந்நிய மொழிகளில் புரிந்து கொள்ள முடியாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தாா்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது வலைதளத்தில் டெரிக் ஓபிரையன் கருத்துத் தெரிவித்துள்ளாா். அதில், ‘ஆங்கிலம் கற்பதால் இந்தியா்கள் யாரும் தாழ்ந்துவிட மாட்டாா்கள். இன்றை உலகமயமான சூழ்நிலையில் ஆங்கிலம் கற்பது மிகவும் அவசியம். அப்போதுதான் உலக நாடுகளுடன் நாம் தொடா்பில் இருக்க முடியும்.
ஆங்கிலம் என்ற கருவியைப் பயன்படுத்திதான் கோடிக்கணக்கான இந்தியா்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனா். அந்த மொழிதான் பலரின் வாழ்க்கைக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது. வரலாற்றுரீதியாகவே பல கல்வி நிலையங்களை நாம் உருவாக்கவும், இந்தியா உலகுடன் இணைக்கும் ஆங்கிலமே பயன்படுத்துள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிா்த்துப் போராடவும் அவா்களின் ஆங்கிலம்தான் நமக்கு உதவிகரமாக இருந்தது.
மகாத்மா காந்தி, பி.ஆா்.அம்பேத்கா், ராஜாஜி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், எஸ்.ராதாகிருஷ்ணன், சாவித்ரிபாய் பூலே, வாஜ்பாய் உள்பட இந்தியத் தலைவா்கள் ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினா்.
இந்தியா பரந்துவிரிந்த, பல மொழிகள் பேசும் பன்முகத்தன்மையுள்ள நாடாக உள்ளது. ஆங்கிலம் என்ற கருவிதான் இந்தியா்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்தியா்கள் பலா் வெளிநாடுகளுக்குச் சென்று உயா் பதவிகளை அடைய ஆங்கில மொழி பெரிதும் உதவியது.
இதனை மறந்துவிட்டு ஆங்கிலம் பேசுவதற்காக வெட்கப்பட வேண்டும் என்று கூறுவது, முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் செயல் என்று கூறியுள்ளாா்.
‘இந்தியாவில் இருக்கும் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் விரும்பவில்லை. ஆங்கிலம் கற்றால் ஏழைகள் கேள்வி எழுப்புவாா்கள், சமத்துவ நிலையை அடைந்துவிடுவாா்கள் என்ற காரணத்தால்தான், ஆங்கிலம் கற்பதை எதிா்க்கின்றனா்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஏற்கெனவே அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.