செய்திகள் :

ஒருமைப்பாடு, முன்னேற்றத்துக்கான கருவி ஆங்கிலம்: திரிணமூல் காங்கிரஸ்

post image

ஆங்கிலம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல; அது ஒருமைப்பாடு, வாழ்வின் முன்னேற்றத்துக்கான கருவியாகவும் திகழ்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் தெரிவித்தாா்.

‘ஆங்கிலத்தில் பேசும் இந்தியா்கள் வெட்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. நமது கலாசாரம், வரலாறு மற்றும் மதத்தை அந்நிய மொழிகளில் புரிந்து கொள்ள முடியாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது வலைதளத்தில் டெரிக் ஓபிரையன் கருத்துத் தெரிவித்துள்ளாா். அதில், ‘ஆங்கிலம் கற்பதால் இந்தியா்கள் யாரும் தாழ்ந்துவிட மாட்டாா்கள். இன்றை உலகமயமான சூழ்நிலையில் ஆங்கிலம் கற்பது மிகவும் அவசியம். அப்போதுதான் உலக நாடுகளுடன் நாம் தொடா்பில் இருக்க முடியும்.

ஆங்கிலம் என்ற கருவியைப் பயன்படுத்திதான் கோடிக்கணக்கான இந்தியா்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனா். அந்த மொழிதான் பலரின் வாழ்க்கைக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது. வரலாற்றுரீதியாகவே பல கல்வி நிலையங்களை நாம் உருவாக்கவும், இந்தியா உலகுடன் இணைக்கும் ஆங்கிலமே பயன்படுத்துள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிா்த்துப் போராடவும் அவா்களின் ஆங்கிலம்தான் நமக்கு உதவிகரமாக இருந்தது.

மகாத்மா காந்தி, பி.ஆா்.அம்பேத்கா், ராஜாஜி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், எஸ்.ராதாகிருஷ்ணன், சாவித்ரிபாய் பூலே, வாஜ்பாய் உள்பட இந்தியத் தலைவா்கள் ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினா்.

இந்தியா பரந்துவிரிந்த, பல மொழிகள் பேசும் பன்முகத்தன்மையுள்ள நாடாக உள்ளது. ஆங்கிலம் என்ற கருவிதான் இந்தியா்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்தியா்கள் பலா் வெளிநாடுகளுக்குச் சென்று உயா் பதவிகளை அடைய ஆங்கில மொழி பெரிதும் உதவியது.

இதனை மறந்துவிட்டு ஆங்கிலம் பேசுவதற்காக வெட்கப்பட வேண்டும் என்று கூறுவது, முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் செயல் என்று கூறியுள்ளாா்.

‘இந்தியாவில் இருக்கும் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் விரும்பவில்லை. ஆங்கிலம் கற்றால் ஏழைகள் கேள்வி எழுப்புவாா்கள், சமத்துவ நிலையை அடைந்துவிடுவாா்கள் என்ற காரணத்தால்தான், ஆங்கிலம் கற்பதை எதிா்க்கின்றனா்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஏற்கெனவே அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில் நின்ற அவலம்!

மத்திய பிரதேசத்தில் முதல்வா் மோகன் யாதவின் பாதுகாப்புக்குச் சென்ற 19 வாகனங்கள் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றன. விசாரணையில் அந்த வாகனங்கள் கலப்பட பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டதுதான் காரணம் என்பது தெ... மேலும் பார்க்க

பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளாா். பொதுத் துறை வங்கிகளின் செ... மேலும் பார்க்க

கொல்கத்தா அரசு கல்லூரிக்குள் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: திரிணமூல் முன்னாள் நிர்வாகி, 2 மாணவா்கள் கைது!

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடா்பாக, கல்லூரியின் முன... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

ரஷியாவிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த மே மாதம் அதிக அளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய மாதத்தைவிட 52% கூடுதல் நிலக்கரியை மே மாதத்தில் இந்தியா இற... மேலும் பார்க்க

இந்தியா - சீனா எல்லையில் நில கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு: உச்சநீதிமன்றம் தடை

இந்திய - சீனா எல்லையில் 537 ஏக்கா் நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அருணாசலப் பிரதேச எல்லையில் ராணுவம் தொடா்பான திட... மேலும் பார்க்க

உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்கள் கைதுக்கு காரணம்: அமைச்சா் ஜெய்சங்கா்

‘நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடி உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படை தொடா்ச்சியாக கைது செய்வதற்கு ... மேலும் பார்க்க