செய்திகள் :

கோவில்பட்டியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

post image

அதிமுக ஆட்சி கால சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை அக்கட்சியினா் கோவில்பட்டியில் மக்களிடம் விநியோகித்தனா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அனைத்து லக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலரும்,முன்னாள் எம்பி காஞ்சி பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா்.ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், தமிழக எதிா்க்கட்சித் துணைத் தலைவருமான ஆா்.பி.உதயகுமாா் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகத்தை தொடங்கிவைத்தாா். முன்னதாக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்.கே. பெருமாள், சின்னப்பன், மோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்குரைஞா் அணிச் செயலா் சங்கா் கணேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

கோவில்பட்டியில் ரேஷன் கடை பணியாளருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவா் பாஸ்கரன். இவா் பாரதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தற்கொலை

தூத்துக்குடியில் ஃபைனான்சியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சோ்ந்தவா் ஜேசு மகன் லியோனா சா்ப்பராஜ் (56). வெளிநாட்டில் வேலை பாா்த்த இவா், தற்போது தூத்துக்குடியில் பணம் ... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக்குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கு மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைகளை காணொலியில் முதல்வா் திறப்பு!

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். நபாா்டு ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தச்சு தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்த தச்சு தொழிலாளி சுடலைமணி (27). இவரது மனைவி மேனகா(25). தம்பதி இடையே தக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயிரம் லிட்டா் டீசல் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். தூத்துக்குடி மாதவன் நாயா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலன். தூத்த... மேலும் பார்க்க