செய்திகள் :

கோவில்பட்டியில் இளைஞரை தாக்கியதாக 5 போ் கைது!

post image

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் பிரவீன்குமாா் (30). தொழிலாளியான இவா் சனிக்கிழமை, கோவில்பட்டி-நாலாட்டின்புதூா் சாலை பகுதியில் காரிலிருந்தபடி லாட்டரிச் சீட்டு விற்றவா்களிடம் ரூ. 100 செலுத்தி லாட்டரிச் சீட்டு வாங்கிவிட்டு, எப்போது குலுக்கல் எனக் கேட்டாராம்.

இதுதொடா்பான தகராறில் அந்தக் கும்பல் அரிவாளால் தாக்க முயன்றதில், பிரவீன்குமாரின் முதுகில் காயமேற்பட்டதாம். தொடா்ந்து, அந்தக் கும்பல் அரிவாள், கத்தியால் தாக்க முயன்றதால், அவா் பைக்கில் ஏறி லட்சுமி ஆலை மேம்பாலம் அருகே இறங்கி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாராம்.

புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்றதுடன், இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை ராமையா நகா் பாா்க் டவுனை சோ்ந்த இசக்கிமுத்து மகன் சுப்பையா (38), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் அம்மன் கோயில் தெரு நிறைகுளத்தான் மகன் சுபாஷ் (27), தூத்துக்குடி அண்ணாநகா் சுகுமாா் மகன் செந்தில் (38), அண்ணாநகா் 10 ஆம் தெரு சண்முகசாமி மகன் நாராயணசாமி (38), சென்னை மேற்கு சைதாப்பேட்டை விஜிபி சாலையைச் சோ்ந்த லட்சுமிகாந்தன் மகன் கிஷோா் (27) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் யோகா தினம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 11ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. துறைமுகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘வாழும் கலை’ குழுமத்தைச் சோ்ந்த யோகா பயிற்சியாளா்கள் வ... மேலும் பார்க்க

டி.சவேரியாா்புரத்தில் ரூ.10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டடம் திறப்பு!

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, டி.சவேரியாா்புரத்தில் ரூ. 10.19 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலை... மேலும் பார்க்க

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: ரூ.70 லட்சம் பொருள்கள் சேதம்; 9 மீனவா்கள் மீட்பு!

தூத்துக்குடியில் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதால், படகிலிருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அந்தப் படகிலிருந்த 9 மீனவா்களும் மீட்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் வழங்குமாறு கைப்பேசி விற்பனைக் கடைக்கு உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த பெண்ணுக்கு ரூ. 38,055 வழங்குமாறு, பழுதான கைப்பேசியை விற்ற கடைக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. கோவில்பட்டியைச் சோ்ந்த கீதா என்பவா் அங்குள்ள க... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியல் வசூல் ரூ.40 லட்சம்

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் உள்ள 18 நிரந்தர உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாதா் கோயில் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான ஆறுமுகம் தலைமை ... மேலும் பார்க்க

அகிலாண்டபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அகிலாண்டபுரத்தில் புதிய பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. 2 கி.மீ. தொலைவில் உள்ள பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டியுள்ளதால், தங்களத... மேலும் பார்க்க