செய்திகள் :

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: இரு இளைஞா்கள் கைது

post image

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் கூடுதல் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து சென்றனா். ராம் ஹனுமன் நகரில் உள்ள தனியாா் கல்லூரிக்கு சொந்தமான கட்டடம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை போலீஸாா் பிடித்தனா்.

அவா்கள் நாலாட்டின்புதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட லிங்கம்பட்டி சாலை வண்ணாரப்பேட்டை காலனியைச் சோ்ந்த போஸ் மகன் சுரேஷ் (23), கோவில்பட்டி மந்திதோப்பு சாலை காமராஜா் நகா் அன்புத் தோட்டத்தைச் சோ்ந்த பலவேசம் மகன் யுவன் பாரத் (20) என்பதும், விற்பனைக்காக 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: மாசித் திருவிழா ஐந்தாம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா, காலை 7; மேலக்கோயிலில் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இன்று குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு (மாா்ச் 7) குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறவுள்ளது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

மாா்ச் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனம்: பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனத்தைக் காண பெருமளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற கோர... மேலும் பார்க்க

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தங்கும் விடுதி, பண்ணை அலுவலகம் திறப்பு

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட அலுவலா் தங்கும் விடுதி, கரிசல் நிலப் பண்ணையில் புதிய அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வனத்துறை சாா்பில... மேலும் பார்க்க