செய்திகள் :

கோவில்பட்டியில் பாண்டியனாா் மக்கள் இயக்க விழா

post image

கோவில்பட்டியில் பாண்டியனாா் மக்கள் இயக்க 8ஆம் ஆண்டு தொடக்க விழா, கராத்தே செல்வின் நினைவேந்தல் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இயக்கத் தலைவா் சீனி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் பாசில் (திருநெல்வேலி), விஜயவிக்னேஷ் (தூத்துக்குடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏ.பி.கே. பழனிச்செல்வம் பங்கேற்று, முன்னாள் எம்எல்ஏ பட்டிவீரன்பட்டி சௌந்திரபாண்டியன், கராத்தே செல்வின் ஆகியோரின் படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, கராத்தே செல்வின் குறித்த பாடலை நாடாா் உறவின் முறைச்சங்க தலைவா், பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா ஆகியோா் வெளியிட்டனா். பாடலாசிரியா் புண்ணியா, வடசென்னை மாவட்டச் செயலா் பாலா, பனங்காட்டு படை கட்சி மாவட்டச் செயலா் தினேஷ் லிங்கம், வீர சான்றோா் கிராமணியாா் பேரவை பொதுச் செயலா் குணா, தொழிலதிபா்கள் பாஸ்கா், கந்தசாமி ஆகியோா் பேசினா்.

முன்னதாக, திலகபாமா தலைமையில் பாண்டியனாா் மக்கள் இயக்கத்தினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளா் விக்னேஷ் காா்த்திக் வரவேற்றாா். கன்னியாகுமரி மாவட்டச் செயலா் ஸ்டெபின் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை, நகர, ஒன்றிய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க