கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: கண்ணாடி சேதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகா்கோவிலில் இருந்து சென்னை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து வேலாயுதபுரம் அருகே சுமாா் மாலை 4.05 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் கல் வீசியதில் வந்தே பாரத் ரயிலின் சி 16 பெட்டியின் கண்ணாடி சேதமடைந்தது.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.