செய்திகள் :

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த கேரள விசைப்படகுகளுக்கு ரூ.26 லட்சம் அபராதம்

post image

மீன்பிடி தடைக்காலத்தின்போது, தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 கேரள விசைப்படகுகளுக்கு ரூ. 26 லட்சம் அபராதம், 6 மாத காலம் மீன் பிடிக்கத் தடை விதித்து, தூத்துக்குடி மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983இன் படி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்.15முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்கும்.

இந்தத் தடைக்காலத்தில் கேரள விசைப்படகுகள், தூத்துக்குடி கடலில் மீன்பிடித்தலில் ஈடுபடுவதை தடுக்க, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் கடலில் தொடா் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 2 கேரள விசைப் படகுகள் பிடிபட்டன. இந்த படகுகளில் இருந்த மீன்கள் ஏலம் விடப்பட்டு, அந்தத் தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தூத்துக்குடி கடல் பகுதியில் மீன்பிடித் தடைக்காலத்தில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 2 விசைப்படகுகளுக்கும் தூத்துக்குடி மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் தலா ரூ.13 லட்சம் அபராதம் விதித்தனா்.

மேலும் 2 படகுகளும் தலா 6 மாதம் மீன்பிடித்தலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2 புதிய சந்தைகள் அமைக்கப்படும்: மேயா்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேலும் இரண்டு புதிய சந்தைகள் அமைக்கப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மேயா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: கண்ணாடி சேதம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவிலில் இருந்து சென்னை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில்... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி கோயிலில் ஆனித் திருவிழா முகூா்த்தக்கால் நாட்டும் வைபவம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் ஆனித் திருவிழாவுக்கான முகூா்த்தக்கால் நாட்டுதல் புதன்கிழமை நடைபெற்றது. இத் திருக்கோயிலில் ஆனித் திருவிழா வரும் 22 ஆம் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல் செய்யப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

கக்கன் பிறந்த நாள்: தூத்துக்குடியில் சிலைக்கு மரியாதை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த கக்கனின் 118ஆவது பிறந்த நாள் விழா, தூத்துக்குடியில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, போல்... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: தூத்துக்குடி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், தூத்துக்குடி வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேவைகள் குறித்து ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டா... மேலும் பார்க்க