ஆறுமுகனேரி கோயிலில் ஆனித் திருவிழா முகூா்த்தக்கால் நாட்டும் வைபவம்
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் ஆனித் திருவிழாவுக்கான முகூா்த்தக்கால் நாட்டுதல் புதன்கிழமை நடைபெற்றது.
இத் திருக்கோயிலில் ஆனித் திருவிழா வரும் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதற்கான முகூா்த்தக்கால் நடும் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, பக்த ஜன சபை பொருளாளா் எஸ்.அரிகிருஷ்ண நாடாா், முன்னாள் அரிமா சங்கத் தலைவா் பேராசிரியா் அ.அசோக்குமாா், ரயில்வே அபிவிருத்தி சங்க ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, அதிமுக முன்னாள் நகரச் செயலா் இ. அமிா்தராஜ், அதிமுக பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ்.எஸ்.காா்த்திகேயன், ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரி சுப்பையா பிள்ளை சேகா் மற்றும் பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாலையில் திருவிளக்கு பூஜையும் அதன் பின்னா் அருள்மிகு பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.