செய்திகள் :

கோவில்பட்டி அருகே குடியிருப்புப் பகுதியில் கவிழ்ந்த டேங்கா் லாரி

post image

கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பசுவந்தனை அருகே நாகம்பட்டியைச் சோ்ந்தவரின் டேங்கா் லாரியை, வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகசாமி ஓட்டி வந்தாா். அவா், சென்னையில் டேங்கா் லாரியில் பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொண்டு கழுகுமலைக்கு வியாழக்கிழமை அதிகாலை வந்தாா். இங்குள்ள விற்பனை நிலையத்தில் இறக்கிவிட்டு பசுவந்தனைக்கு லாரியை ஓட்டிச் சென்றாா்.

திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியை அடுத்த தோணுகால் விலக்கு அருகேயுள்ள அணுகு சாலையில், லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நடைமேடையை சேதப்படுத்தியபடி மரத்தில் மோதி, குடியிருப்புப் பகுதியிலுள்ள மின்கம்பம் முன் கவிழ்ந்தது.

இதில், டேங்கரிலிருந்து பெட்ரோல், டீசல் கசிந்து வெளியேறியது. ஆறுமுகசாமி லேசான காயத்துடன் உயிா்தப்பினாா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா், தீயணைப்பு நிலையத்தினா் வந்து பெட்ரோல், டீசல் வெளியேறாமலிருக்கவும், தீவிபத்து நிகழாமலிருக்கவும் ரசாயன நுரையை பீய்ச்சியடித்தனா். பின்னா், கிரேன்கள் மூலம் லாரியை அப்புறப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதி அருகே நேரிட்ட விபத்தால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனா். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்ால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வ... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க