செய்திகள் :

கோவை: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிவிட்டு... அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!

post image

கோவை, கோவைப்புதூர் பகுதியில் பால விநாயகர் கோயில் உள்ளது. அங்கு தினசரி பூஜை முடிந்தவுடன் கோயிலை பூட்டி  செல்வது வழக்கம். அதன்படி கடந்த திங்கள் கிழமை இரவு கோயிலில் பூஜை முடிந்த பிறகு, வழக்கம் போல கோயிலை பூட்டி விட்டு அர்ச்சகர் சென்று விட்டார்.

கோவை
கோவை

நேற்று காலை அர்ச்சகர் மீண்டும் கோயிலுக்கு வந்தபோது கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அருகிலேயே ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

தகவலறிந்த குனியமுத்தூர் காவல்துறையினர் உடனடியாக கோயிலுக்கு சென்று, தூங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி விசாரணை செய்தனர். அதில் அந்த நபர் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த சின்னையன் என்று தெரியவந்தது. அவர் மீது ஏற்கெனவே பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.

திருடன்

இந்த கோயிலுக்கும் திருடுவதற்காக சென்ற சின்னையன், போதை தலைக்கேறியதால் அப்படியே படுத்து தூங்கியது தெரியவந்துள்ளது. சின்னையன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவைப்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் விநாயகர் கோயிலுக்குள் சென்று உண்டியலை உடைத்து சுமார் ரூ.8,000 திருடியுள்ளார். மேலும் கோயில் கருவறை கதவை இரும்பு கம்பி மூலம் உடைத்து, அங்கிருந்த பொருள்களையும் திருடியுள்ளார். அந்த நேரத்தில் பலத்த மழை பெய்த காரணத்தால், மழை நின்றதும் செல்லலாம் என படுத்து தூங்கியுள்ளார்.

கைது

அதிக போதையால் அவர் அசந்து தூங்கியதில் சிக்கி விட்டார். கோயில் நிர்வாகத்தினர் அளித்தப் புகாரில் காவல்துறையினர் சின்னையன் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஒடிசா கடற்கரையில் ஆண் நண்பர் கண்முன்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 மைனர் உட்பட 10 பேர் கைது

ஒடிசா கடற்கரையில் நடந்துள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள பெர்ஹாம்பூர் அருகில் இருக்கும் கோபால்பூர் கடற்கரைக்கு 20 வயது கல்லூரி மாணவியும், ... மேலும் பார்க்க

ஆண் நண்பரை தாக்கி இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - தீர்ப்பைக் கேட்டு கதறி அழுத குற்றவாளிகள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், திருபுவனை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பணியை முடித்துவிட்டு, இ... மேலும் பார்க்க

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்; 9 வயது மகன் கண் முன்னே நடந்த கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கெர்லி என்ற இடத்தில் வசித்து வந்தவர் வீரு என்ற மான் சிங். மான் சிங் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக அவரது மனைவி அனிதா தெரிவித்தார். ஆனால் மான் சிங் உடம... மேலும் பார்க்க

நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு, ஏ.சி. போட்டு ஓய்வு எடுத்து... திருடிச்சென்ற திருடர்கள்! | உ.பி ஷாக்

திருட வருபவர்கள் சில நேரம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு செல்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு வீட்டில் திருட வந்த திருடர்கள் இரவு முழுக்க இருந்து சமை... மேலும் பார்க்க

முத்திரைத்தாள் மோசடி: அதிமுக முன்னாள் MLA சாந்தி ராமு மீது 5 பிரிவுகளில் வழக்கு - என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி ராமு. படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தே.மு.தி.க-வில் இணைந்து கட்சி பதவிகளை வகித்து வந்தார். சாந்தி ராமுபல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்சியில் இர... மேலும் பார்க்க

சிவகங்கை: 6 பேர் உயிரிழந்த குவாரி.. `விதிகளை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டதால் ரூ.91 கோடி அபராதம்'

விதி மீறலால் 6 பேர் உயிரிழக்க காரணமான கல் குவாரி நிறுவனத்துக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மேகா ப்ளூ மெட்டல் குவாரிசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்ல... மேலும் பார்க்க