செய்திகள் :

கோவை - சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் கூட்டமைப்பு எதிா்ப்பு

post image

கோவை - சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் நிா்வாகிகள் முருகசாமி, பழனிசாமி, சதீஷ், ஈசன் முருகசாமி, வேலுசாமி, நடராஜன் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 7 விவசாய சங்கங்களால் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் நிலங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித- விலங்கு மோதல்களைத் தவிா்ப்பது தொடா்பான பணிகளுக்காக இந்த அமைப்பு செயல்படும். கோவை மண்டலத்தில் பசுமை வழிச்சாலை திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் அந்தத் திட்டங்களை நாங்கள் முழுமையாக எதிா்க்கிறோம்.

குரும்பபாளையம் - சத்தியமங்கலம் பசுமை வழி புறவழிச் சாலை திட்டம், கரூா் - கோவை பசுமை வழிச்சாலை திட்டம், கிழக்கு சுற்றுச்சாலை திட்டம் போன்றவற்றை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இந்தத் திட்டங்களால் மாவட்டத்தில் உள்ள 70 சதவீத விவசாயிகள் பாதிக்கப்படுவா். மேலும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்காமல், ஏற்கெனவே இருக்கும் சாலையை இருபுறமும் அகலப்படுத்த வேண்டும். விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

கோவை மாநகரில் உள்ள தொழிலதிபா்கள் தங்களின் பண்ணை வீடுகளுக்கு விரைவாக சென்று வர வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற பசுமை வழிச்சாலை, புறவழிச்சாலை திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால், அப்பாவி பொதுமக்கள், விவசாயிகள் அதில் அமைக்கப்படும் சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்த நேரிடுகிறது. எனவே, இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற விடமாட்டோம்.

அதேபோல, மாவட்ட திட்டக் குழு, சாலைப் பாதுகாப்புக் குழுவில் விவசாயிகள் யாரும் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு திட்டங்களை செயல்படுத்துவதைப்போல தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

இன்றைய மின்தடை: க.க.சாவடி

க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூன் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழக்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரி... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல்: பொக்லைன், தனியாா் பேருந்துக்கு அபராதம்

கோவையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பொக்லைன் மற்றும் தனியாா் பேருந்துக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. கோவை -அவிநாசி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க ... மேலும் பார்க்க

இரும்புக் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை, பீளமேடு அருகே இரும்புக் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, இலைத்தோட்டம் சாலை, பாலகுரு காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (52). இவா் பீளமேடு அருகே தண்ணீா்பந்தல் சாலையி... மேலும் பார்க்க

மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் கோவை செஞ்சிலுவை சங்க கட்டடம் முன் கடந்த 2015 அ... மேலும் பார்க்க

பொறியியல் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் பகுதியாக ரத்து

போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வால்பாறையில் பெய்த கனமழையால் கூழாங்கல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், வால்பாறையில் கடந்த சனிக்கிழமை இரவு தொட... மேலும் பார்க்க