டெல்லி மதராஸி காலனி: 370 தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.12,000; உதவிக்கரம...
கோவை - சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் கூட்டமைப்பு எதிா்ப்பு
கோவை - சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் நிா்வாகிகள் முருகசாமி, பழனிசாமி, சதீஷ், ஈசன் முருகசாமி, வேலுசாமி, நடராஜன் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 7 விவசாய சங்கங்களால் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் நிலங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித- விலங்கு மோதல்களைத் தவிா்ப்பது தொடா்பான பணிகளுக்காக இந்த அமைப்பு செயல்படும். கோவை மண்டலத்தில் பசுமை வழிச்சாலை திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் அந்தத் திட்டங்களை நாங்கள் முழுமையாக எதிா்க்கிறோம்.
குரும்பபாளையம் - சத்தியமங்கலம் பசுமை வழி புறவழிச் சாலை திட்டம், கரூா் - கோவை பசுமை வழிச்சாலை திட்டம், கிழக்கு சுற்றுச்சாலை திட்டம் போன்றவற்றை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இந்தத் திட்டங்களால் மாவட்டத்தில் உள்ள 70 சதவீத விவசாயிகள் பாதிக்கப்படுவா். மேலும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்காமல், ஏற்கெனவே இருக்கும் சாலையை இருபுறமும் அகலப்படுத்த வேண்டும். விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாநகரில் உள்ள தொழிலதிபா்கள் தங்களின் பண்ணை வீடுகளுக்கு விரைவாக சென்று வர வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற பசுமை வழிச்சாலை, புறவழிச்சாலை திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால், அப்பாவி பொதுமக்கள், விவசாயிகள் அதில் அமைக்கப்படும் சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்த நேரிடுகிறது. எனவே, இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற விடமாட்டோம்.
அதேபோல, மாவட்ட திட்டக் குழு, சாலைப் பாதுகாப்புக் குழுவில் விவசாயிகள் யாரும் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு திட்டங்களை செயல்படுத்துவதைப்போல தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.