செய்திகள் :

கோவை: பெண்ணுடன் பகை; தவறாக பேசி வந்த இளைஞர் - 12 இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்

post image

கோவை காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 23). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். வீடு சிறியதாக இருப்பதால் சஞ்சய் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். தினசரி அங்கு தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கொலை
கொலை

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டில் தூங்க சென்றவர் எழுந்திரிக்கவில்லை. அவரின் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அங்கு அவர் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சஞ்சயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தனா

அதே ஊரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கீர்த்தனா என்பவருக்கும், சஞ்சய்க்கும் பகை இருந்துள்ளது. இதன் காரணமாக கீர்த்தனா குறித்து, சஞ்சய் ஊர் முழுவதும் தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த கீர்த்தனா தன் உறவினர் கமலக்கண்ணன் (வயது 20) என்பவரிடம் கூறியுள்ளார். ஆட்டோ டிரைவரான கமலக்கண்ணன், தன்னுடைய நண்பனும், கூலித் தொழிலாளியுமான நாகராஜ் (வயது 19)  என்பவரை அழைத்துக் கொண்டு சஞ்சயை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது இருவரும் சஞ்சயை சரமாரியாக  வெட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

அங்கு ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கீர்த்தனா கண்காணித்துள்ளார். 12 இடங்களில் காயமடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கமலக்கண்ணன், நாகராஜ், கீர்த்தனா ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை வண்டலூர்: தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; மூவர் கைதின் பின்னணி என்ன?

சென்னை, வண்டலூரில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் 18 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.இந்தத் தனியார் காப்பகத்தில் பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில் 18 சிற... மேலும் பார்க்க

சண்டையை விலக்க வந்தவரைத் தாக்க முயன்ற பெண்; குழந்தையின் உயிரைப் பறித்த திரிசூலம்; என்ன நடந்தது?

குடும்பச் சண்டையில் பரிதாபமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அருகில் உள்ள கெட்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சச்சின். சச்சினுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடை... மேலும் பார்க்க

ஊட்டி: தாம்பத்யத்திற்கு மறுத்த மனைவி, பெற்ற மகளையே அழைத்த கொடூர தந்தை - அதிர்ச்சி பின்னணி

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். 2 மகன்கள் மற்றும் 2 மகள் உள்ள நிலையில், கணவன் கட்டட வேலையும் மனைவி காட்டேஜ் ஒன்றிலும் பணியாற்றி... மேலும் பார்க்க

சிவகாசி: வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் என 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை சார்ந்து நேரடியாகவும்,... மேலும் பார்க்க

முடி வெட்டச் சொன்ன ஆசிரியர்; கத்தியால் குத்திக் கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்! - என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வராக ஜக்பீர் சிங் (50) பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளியி... மேலும் பார்க்க

ரீல்ஸ் வெளியிட்ட டென்னிஸ் வீராங்கனை; கோபத்தில் சுட்டுக்கொலை செய்த தந்தை.. ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ்(25). டென்னிஸ் வீராங்கனையானை ராதிகா மாநில அளவில் விளையாடி இருக்கிறார். இரட்டையர் பிரிவில் ராதிகா 113-வது இடத்தில் இருக்கிறார். ராதிகாவிற்கும் ... மேலும் பார்க்க