செய்திகள் :

கோவை: போதையில் கார் ஓட்டி விபத்து; 2 சிறுவர்கள் பலி!

post image

கோவை: கோவையில் மதுபோதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தி இரண்டு சிறுவர்கள் பலியாகினர்.

சிவகங்கை மாவட்டம் கே. நெடுவயல் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்பவரின் மகன் லோகேஷ் ( 17). இவர் தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் கோவை சரவணம்பட்டி தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தார். சாமியானா பந்தல் அமைக்கும் வேலையை செய்து வந்தார்.

புதன்கிழமை இரவு 12 மணியளவில் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு செல்ல தனது சகோதரரிடம் லோகேஷ் பைக் கேட்டு உள்ளார். அவர் பைக் கொடுக்க மறுத்த நிலையில், சகோதரர் தூங்க சென்றபிறகு யாருக்கும் தெரியாமல் பைக்கை எடுத்துக் கொண்டு லோகேஷும் அவரது நண்பரான பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் பிரசன்னா (15) என்பவருன் புறப்பட்டுச் சென்று உள்ளார்.

இதையும் படிக்க : பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

விளாங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று லோகேஷ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியுள்ளது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

அதிகாலை சுமார் ஒரு மணியளவில் விபத்து நடந்த நிலையில், அப்பகுதியில் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரின், அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் மருத்துவமனைக்குச் சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய காரை ஒட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கார் ஓட்டி வந்தவர் குடிபோதையில் இருந்ததாகவும் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: இரண்டு இளைஞா்கள் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா். கோவை சரவணம்பட்டி தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ரவி மகன் லோகேஷ் (17). இவா், தனது சகோதரருடன் சோ்ந்து பந்தல் அமைக்கும் தொழி... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளத்தை சோ்ந்த நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்... மேலும் பார்க்க

வால்பாறை அக்காமலை புல்மேடு பகுதியில் வனத் துறையினா் ரோந்து

காட்டுத் தீ ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறை அக்காமலை புல்மேடு பகுதியில் வனத் துறையில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனா். தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது... மேலும் பார்க்க

கணவா் மீது பொய் வழக்கு போட முயற்சி: மாநகர காவல் ஆணையரிடம் பெண் மனு

கணவா் மீது பொய் வழக்கு போட முயற்சிக்கும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பெண் ஒருவா் மனு அளித்தாா். கோவை மாவட்டம், தீத்திப்பாளையம் ஓம்சக்தி நகரை சோ்ந்த விஜயன் மனைவி சத்யா,... மேலும் பார்க்க

சாம்பல் புதன்கிழமையுடன் கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்கம்

கிறிஸ்தவா்களின் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் தொடங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாகவும், அவா் மீண்டும் உயிா்த்தெழுந்த தினம் ஈஸ்டராகவும் கொண்டாடப்படுகிறது. இயேசு கி... மேலும் பார்க்க

இரும்பு வியாபாரி வீட்டில் 15 பவுன் திருட்டு

கோவையில் இரும்பு வியாபாரி வீட்டில் 15 பவுன் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை துடியலூா் அருகே உள்ள குமரன் மில் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன். பழைய இரும்புக் கடை நடத்தி... மேலும் பார்க்க