செய்திகள் :

கோவை மத்திய சிறையில் மற்றொரு கைதி மா்ம மரணம்

post image

கோவை மத்திய சிறையில் மீண்டும் மற்றொரு ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மத்திய சிறையில் 2,000-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு தனித்தனியாக கட்டடங்கள் உள்ளன.

இந்த நிலையில், திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த அலெக்ஸ்(37), போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று 2021 ஆம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஆஸ்துமா மற்றும் வலிப்பு பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மதுரையில் மல்லிகைப் பூ விலை கடும் உயா்வு: கிலோ ரூ.4,200 ஆக விற்பனை

இதற்கிடையே அவருக்கு நோய் பாதிப்பு அதிகமானது. இதனால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் ரேஸ்கோா்ஸ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மத்திய சிறையில் கடந்த 27 ஆம் தேதி நெல்லையைச் சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீண்டும் மற்றொரு கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

சென்னை: நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 5.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,965 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கச்சா எண்... மேலும் பார்க்க

வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் குற்ற... மேலும் பார்க்க

முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? - அன்புமணி கேள்வி

மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணி அதிகாரியை ஒரு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருமையில் திட்டுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுத... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டு மக்கள் 'விழிப்புணர்வு உள்ளவர்கள்; ஆளுநரின் பேச்சுக்கு இணங்கமாட்டார்கள்' - திருமாவளவன்

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள், அவர்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட உள்ளனர். டிஜிட்டல் அரெஸ்ட், இணையவழி பண மோசடி உலகம... மேலும் பார்க்க

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு! துப்பாக்கியுடன் மிரட்டிய காவலாளி கைது!

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது. மேலும் சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியை நீட்டி காவல்துறையினரை மிரட்டியதால் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க