செய்திகள் :

கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் - பின்னணி என்ன?

post image

கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் - சங்கீதா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்கள். இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணகுமார் தன் மனைவி சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். பிறகு அவர் தன் சொந்த ஊரான கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள வண்டாழி ஈரட்டுகுளம் என்கிற பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு தன் வீட்டின் முன்பாக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில், கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

சங்கீதா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தின் போது, மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கிருஷ்ணகுமாரின் சடலத்தை பாலக்காடு காவல்துறையினர் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், கிருஷ்ணகுமார் - சங்கீதா இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இருவருக்கும் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கணவன் - மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கிருஷ்ணகுமார் - சங்கீதா தம்பதி உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

உ.பி இளம்பெண் கொலை: மொட்டைபோட்டு கங்கையில் நீராடல்; கேரளாவுக்கு தப்ப முயன்றபோது சிக்கிய காதலன்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இருந்த புதரில் டிராலி பேக் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த பேக்கை பறிமுதல் செய்து த... மேலும் பார்க்க

புல்லட் திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்; 9 புல்லட்கள் பறிமுதல்; 2 திருடர்கள் சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாகத் தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் டூவிலர் திருட்டு வ... மேலும் பார்க்க

`549 கிராம் தங்கம்; 1 கிலோ கஞ்சா!’ - திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகும் கடத்தல் சம்பவம்!

பேங்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பெண் பயணியை... மேலும் பார்க்க

சிறுமலை: வெடிமருந்துடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; துப்பு துலக்கிய போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை 17 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே புதருக்குள் ஒரு ஆண் சடலம் கிடந்தது. போலீஸார், வனத்துறையினர் விசாரிக்க சென்றபோது அருகே கிடந்த பேட்டரி, ஒயர்கள், வெடி மருந்து கிடந்துள்... மேலும் பார்க்க

Haryana: 'நஷ்டமான தொழில்... காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' - சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அ... மேலும் பார்க்க

அம்பத்தூர்: பேட்மிட்டன் பயிற்சியாளர் கொலை வழக்கில் மூவர் சரண்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

அம்பத்தூர் டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. பேட்மிட்டன் பயிற்சியாளரான இவர், தந்தையின் கட்டிட ஒப்பந்த வேலைகளையும் கவனித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ்பாபு தனியாக... மேலும் பார்க்க