செய்திகள் :

’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!

post image

உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்து அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் போராட்டம் நடத்தினார்.

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று காலை ரேபரேலி தொகுதிக்கு சென்றார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி பயணித்த கத்வாரா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து அவரின் வருகைக்கு எதிர்ப்பு உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் தலைமையில் பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவ்வழியாக வந்த ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்த பாஜகவினர், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி, வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டில் திணறுவதால் இப்படி செய்கிறார்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாற்றுப்பாதையில் ராகுல் காந்தியை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர் தினேஷ் பிரதாப், “ராகுல் காந்திக்கும் தாய் உள்ளார். அவர் பிறரின் தாயை அவதூறாக பேச அனுமதித்திருக்க கூடாது. பிரதமரின் தாய் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். பேசியவரை கட்சியைவிட்டு நீக்கி, வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ராகுல் காந்தி அவர்களை ஊக்குவிப்பதாக தெரிகிறது. அதற்கு எதிராகதான் இன்று போராட்டம் நடத்தினோம்” என்றார்.

பிகாரில் வாக்குரிமைப் பேரணியில் ராகுல் காந்தி ஈடுபட்டிருந்த போது, தர்பங்காவில் அவர் பேசுவதற்காக போடப்பட்டிருந்த மேடையில் ஏறிய இளைஞர் ஒருவர் மோடியின் தாய் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேடையில் இளைஞர் அவதூறு கருத்து தெரிவித்த சமயத்தில், அந்த இடத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

In Uttar Pradesh, state minister Dinesh Pratap staged a protest by blocking the security vehicles of Lok Sabha Opposition Leader Rahul Gandhi.

இதையும் படிக்க : ரேபரேலியில் ராகுல் காந்தி!

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட... மேலும் பார்க்க

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக செப். 12 ஆம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவ... மேலும் பார்க்க

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

10 லட்சம்(1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ... மேலும் பார்க்க

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்... மேலும் பார்க்க