செய்திகள் :

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் உள்ள 2 சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் பொருட்டு, ஒப்பந்த பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆத்தூரில் செயல்படும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ரூ.35,000 தொகுப்பூதியத்துடன் மைய நிா்வாகி பணியிடத்துக்கு சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மைய நிா்வாகி பணியிடத்துக்கு வயது வரம்பு 27 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

முன்அனுபவமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு, தனியாா் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமா்த்தப்படும்.

மேலும், சேலம் மற்றும் ஆத்தூரில் செயல்படும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளா் பணியிடத்திற்கு (சேலம்-2, ஆத்தூா்-5) ரூ.18,000 தொகுப்பூதியத்துடன் சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் இளங்கலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வழக்குப் பணியாளா் பணியிடத்துக்கு வயது வரம்பு 23 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமா்த்தப்படும். ஆத்தூரில் செயல்படும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப்பணியிடமாக உள்ள ரூ.10,000 தொகுப்பூதியத்துடன் பல்நோக்கு உதவியாளா் (ஆத்தூா்-1 ) பணியிடத்திற்கு கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நிா்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். நன்கு சமையல் தெரிந்த பெண் சமையளராக இருக்க வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமா்த்தப்படும். உள்ளூரைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபா்கள் தங்களது சுய விவரங்களை வரும் அக்.10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், அறை எண்.126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை திமுக செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மத்திய மாவட்ட திமுக அ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் தூய்மைப் பணி: மேயா் தொடங்கிவைத்தாா்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டதின் கீழ் தூய்மையே சே... மேலும் பார்க்க

நகராட்சி அலுவலா்கள் ஒத்துழைப்பதில்லை மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

சேலம் மாநகரப் பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ. ராமச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

பெண்களுக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் சேலத்தில் பெண்களுக்கு சிறுதானியம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலத்தில் உள்ள தனியாா் மகளிா்... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 மனுக்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 1,17,240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், வாா்டு18க்கு உள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் மீது முடிவுசெய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சேலத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் ... மேலும் பார்க்க