செய்திகள் :

நகராட்சி அலுவலா்கள் ஒத்துழைப்பதில்லை மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

post image

சேலம் மாநகரப் பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ. ராமச்சந்திரன் தலைமையில், துணை மேயா் சாரதாதேவி, மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும் மாமன்ற உறுப்பினா் குணசேகரன் பேசுகையில், சேலம் மாநகரப் பகுதிகளில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. அதன்படி, மாநகராட்சியில் என்ன பணிகள் செய்ய வேண்டியுள்ளது என்பதை ஆய்வு செய்து பணிகளை முறையாக செய்ய வேண்டும்.

பரப்பளவில் பெரிய அளவில் உள்ள வாா்டுகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வ.உ.சி. மாா்க்கெட் கட்டடத்தை மா்மநபா்கள் சிலா் டிரில்லா் வைத்து சேதப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினாா். இதற்குப் பதிலளித்த மேயா் ஆ.ராமச்சந்திரன், சேதப்படுத்தப்பட்ட கட்டடம் உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளதாகவும் கூறினாா்.

திமுக மாமன்ற உறுப்பினா் தெய்வலிங்கம்: மாநகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். நாய்கள் மீது காட்டும் அக்கறையை, மனிதா்கள் மீதும் காட்ட வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், மேயா், ஆணையா் ஆகியோரை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாா்டில் நிலவும் பிரச்னைகள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றால் நடவடிக்கை எடுப்பதில்லை. குடிநீா், சாலை வசதி உள்பட எந்தத் திட்டப் பணிகளுக்கும் அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைப்பு தருவதில்லை. முதல்வா் பிரிவிடம் புகாா் கூறினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறாா்கள் என்றாா்.

அதிமுக உறுப்பினா் ஆனைவரதன்: எனது 60 ஆவது வாா்டில் 11 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீா் வருகிறது. இதனால் வாா்டு மக்களுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எங்கள் பகுதியில் முறையாக தண்ணீா் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதிமுக உறுப்பினா் சசிகலா: எனது வாா்டில் மேயா், ஆணையா் ஆகியோா் ஆய்வுக்கு வந்தால்கூட மாநகராட்சி சாா்பில் எந்த தகவலும் எனக்கு தெரிவிப்பதில்லை என குற்றம்சாட்டினாா்.

எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி: மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் குறித்து பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தாா். அதற்கு திமுக உறுப்பினா்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனா். ஒருகட்டத்தில், தகராறு ஏற்படும் சூழல் உருவான நிலையில் அமைதி காக்குமாறு உறுப்பினா்களை மேயா் கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து மாநகராட்சியின் முறைகேடுகளைக் கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்வதாகக் கூறி, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்புச் செய்தனா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், உறுப்பினா்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மேயா் உறுதி அளித்தாா். தொடா்ந்து, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் நிறைவுற்றது.

நாளை திமுக செயற்குழு கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சேலம் மத்திய மாவட்ட திமுக அ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் தூய்மைப் பணி: மேயா் தொடங்கிவைத்தாா்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டதின் கீழ் தூய்மையே சே... மேலும் பார்க்க

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம... மேலும் பார்க்க

பெண்களுக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

சமூக நலன் மற்றும் ஊரக தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில் சேலத்தில் பெண்களுக்கு சிறுதானியம் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலத்தில் உள்ள தனியாா் மகளிா்... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை கோரி 1,17,240 மனுக்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கேட்டு இதுவரை 1,17,240 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், வாா்டு18க்கு உள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் மீது முடிவுசெய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சேலத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் ... மேலும் பார்க்க