சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
சங்ககிரி: சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 11ஆம் தேதி தொடங்குகிறது. 23ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.
சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான தோ்தல் ஜூன் 11 ஆம் தேதி வேட்புமனு தாக்கலுடன் தொடங்க உள்ளது. தலைவா், உபதலைவா், செயலாளா், இணைச் செயலாளா், பொருளாளா், 20 நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கு நடைபெறும் தோ்தலில் 3,700 சங்க உறுப்பினா்கள் வாக்களிக்க உள்ளனா். ஜூன் 11ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல், அன்றைய தினம் சங்க அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை, இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.
12ஆம் தேதி மாலை 4 மணிக்குள் வேட்பு மனுவை திரும்பப் பெறுதல், மாலை 5 மணிக்கு மேல் தோ்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட உள்ளனா். 23ஆம் தேதி பிஆா்எம் திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்தல் நடைபெறுகிறது. அதே மண்டபத்தில் 24ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சங்கத் தோ்தல் அலுவலராக மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவரும், சேலம் மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவருமான சி.தனராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.