செய்திகள் :

சங்கம்பட்டியில் மகனை கொலை செய்த தந்தை கைது

post image

பொன்னமராவதி அருகே மகனை கொலை செய்த தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பொன்னமராவதி அருகே சங்கம்பட்டியைச் சாா்ந்தவா் கிருஷ்ணன் மகன் கணேசன் (37) விவசாய கூலி வேலை பாா்த்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மொட்டை மாடியில் மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளாா். தகவலறிந்த காரையூா் போலீஸாா், கணேசனின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனா்.

தொடா்ந்து, குடும்பத்தினா் இறுதிச்சடங்கை முடித்த நிலையில், போலீஸாா் சந்தேகத்தின் பேரில் கணேசனின் தந்தை கிருஷ்ணனை விசாரித்தனா். அதில், மகனை கொன்றதை அவா் ஒப்புக்கொண்டாா். கணேசன் தினமும் மது அருந்திவிட்டு குடும்பத்தினரிடம் வீண் தகராறு செய்து வந்தாா். மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், கடந்த 7-ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டிருந்த கணேசனை கடப்பாரையால் அடித்து கொன்ாக கூறியதையடுத்து கிருஷ்ணனை, போலீஸாா் கைது செய்து தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பொன்னமராவதியில் இன்று மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மகப்பேறு சிகிக்சையளித்த மருத்துவக் குழுவினா்க்கு மாவட்ட சுகாதார அலுவலா் பாராட்டு தெரிவ... மேலும் பார்க்க

அறந்தாங்கி அரசு மாதிரிப் பள்ளியிலிருந்து 7 ஆசிரியா்கள் பணியிட மாற்றம், ஒருவா் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் உள்ள அரசு முன்மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடா்ந்து பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதம் குறைவாகவே இருப்பதைத் தொடா்ந்து, 7 ஆசிரியா்களை பணியிட மாற்றம் செய... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு நூறு சதவீதம் கடன் வழங்க அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளா்களுக்கு 100 சதவீதம் கடன் வழங்க வேண்டும் என மாநில பால் வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் அறிவுறுத்தினாா். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

அரிமளம், தல்லாம்பட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், தல்லாம்பட்டி ஆகிய பகுதியில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் (பொ) எஸ். அசோக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

பால் உற்பத்திப் பொருள்களின் விநியோக பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் சரியாகும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் தயாரிக்கும் பால் உற்பத்திப் பொருள்களின் விநியோகப் பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் சரியாகும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவின் குளிா்பதனக் கிடங்கை திங்கள... மேலும் பார்க்க