எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: ...
சங்கம்பட்டியில் மகனை கொலை செய்த தந்தை கைது
பொன்னமராவதி அருகே மகனை கொலை செய்த தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பொன்னமராவதி அருகே சங்கம்பட்டியைச் சாா்ந்தவா் கிருஷ்ணன் மகன் கணேசன் (37) விவசாய கூலி வேலை பாா்த்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மொட்டை மாடியில் மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளாா். தகவலறிந்த காரையூா் போலீஸாா், கணேசனின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி, குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனா்.
தொடா்ந்து, குடும்பத்தினா் இறுதிச்சடங்கை முடித்த நிலையில், போலீஸாா் சந்தேகத்தின் பேரில் கணேசனின் தந்தை கிருஷ்ணனை விசாரித்தனா். அதில், மகனை கொன்றதை அவா் ஒப்புக்கொண்டாா். கணேசன் தினமும் மது அருந்திவிட்டு குடும்பத்தினரிடம் வீண் தகராறு செய்து வந்தாா். மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், கடந்த 7-ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் உறங்கிக்கொண்டிருந்த கணேசனை கடப்பாரையால் அடித்து கொன்ாக கூறியதையடுத்து கிருஷ்ணனை, போலீஸாா் கைது செய்து தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.