காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மகப்பேறு சிகிக்சையளித்த மருத்துவக் குழுவினா்க்கு மாவட்ட சுகாதார அலுவலா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
காரையூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 6-ஆம் தேதி, 5 கா்ப்பிணிகள் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 பேருக்கும் சுகப்பிரசவம் நடைபெற்றுள்ளது. வட்டார மருத்துவ அலுவலா் இ. அருள்மணி நாகராஜன் தலைமையில் மருத்துவக்குழுவினா் இந்த மகப்பேறு சிகிச்சையை அளித்துள்ளனா். கடந்த 2024-ஆம் ஆண்டு அக்போடா் 1-ஆம் தேதி இம்மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் இதேபோல 5 சுகப்பிரசவங்கள் நடைபெற்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனின் பாராட்டுக்களைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வட்டார மருத்துவ அலுவலா் இ. அருள்மணி நாகராஜன் கூறியதாவது: காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவா்களின் நேரடி கண்காணிப்பில் மகப்பேறு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மகப்பேறு இறப்பு விகிதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைக்கப்பட்டு, மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை எனும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம் என்றாா். மருத்துவக் குழுவினா்க்கு வட்டார மருத்துவ அலுவலா் ராம் கணேஷ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளாா்.