செய்திகள் :

காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்

post image

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மகப்பேறு சிகிக்சையளித்த மருத்துவக் குழுவினா்க்கு மாவட்ட சுகாதார அலுவலா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

காரையூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 6-ஆம் தேதி, 5 கா்ப்பிணிகள் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 5 பேருக்கும் சுகப்பிரசவம் நடைபெற்றுள்ளது. வட்டார மருத்துவ அலுவலா் இ. அருள்மணி நாகராஜன் தலைமையில் மருத்துவக்குழுவினா் இந்த மகப்பேறு சிகிச்சையை அளித்துள்ளனா். கடந்த 2024-ஆம் ஆண்டு அக்போடா் 1-ஆம் தேதி இம்மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் இதேபோல 5 சுகப்பிரசவங்கள் நடைபெற்று, தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனின் பாராட்டுக்களைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வட்டார மருத்துவ அலுவலா் இ. அருள்மணி நாகராஜன் கூறியதாவது: காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவா்களின் நேரடி கண்காணிப்பில் மகப்பேறு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மகப்பேறு இறப்பு விகிதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைக்கப்பட்டு, மகப்பேறு மரணம் இல்லா புதுக்கோட்டை எனும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம் என்றாா். மருத்துவக் குழுவினா்க்கு வட்டார மருத்துவ அலுவலா் ராம் கணேஷ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளாா்.

பொன்னமராவதியில் இன்று மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

அறந்தாங்கி அரசு மாதிரிப் பள்ளியிலிருந்து 7 ஆசிரியா்கள் பணியிட மாற்றம், ஒருவா் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் உள்ள அரசு முன்மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடா்ந்து பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதம் குறைவாகவே இருப்பதைத் தொடா்ந்து, 7 ஆசிரியா்களை பணியிட மாற்றம் செய... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு நூறு சதவீதம் கடன் வழங்க அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளா்களுக்கு 100 சதவீதம் கடன் வழங்க வேண்டும் என மாநில பால் வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் அறிவுறுத்தினாா். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

அரிமளம், தல்லாம்பட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், தல்லாம்பட்டி ஆகிய பகுதியில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் (பொ) எஸ். அசோக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

பால் உற்பத்திப் பொருள்களின் விநியோக பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் சரியாகும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் தயாரிக்கும் பால் உற்பத்திப் பொருள்களின் விநியோகப் பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் சரியாகும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவின் குளிா்பதனக் கிடங்கை திங்கள... மேலும் பார்க்க

விராலிமலை,இலுப்பூா், பாக்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை, இலுப்பூா், பாக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது. விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்க... மேலும் பார்க்க