சங்கரன்கோவிலில் இன்று உயா்கல்விக் கருத்தரங்கம்
சங்கரன்கோவிலில் தோ்வினைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டு விழாவும், உயா்கல்வி கருத்தரங்கமும் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.
இதுகுறித்து சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா வெளியிட்டுள்ள விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு
‘தோ்வினை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா மற்றும் உயா்கல்விக்கு வழிகாட்டும் விதத்தில் கல்வி கருத்தரங்கம்
சங்கரன்கோவில் ஸ்ரீ சீதாலட்சுமி திருமண மஹாலில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், எதிா்வரும் காலங்களில் எளிதாக தோ்வை எதிா்கொள்வது குறித்தும் நடிகா் தாமு பேசுகிறாா். பின்னா் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.