செய்திகள் :

``சசிகலா சிலரால் சூழப்பட்டிருக்கிறார், அதனால் விலகிவிட்டேன்" - வெண்மதி பரபரப்பு குற்றச்சாட்டு

post image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க எனும் கட்சி பல துண்டுகளாக சிதறியது. இதில் ஆரம்பத்தில் கூடுதல் கவனம் பெற்றது சசிகலா தரப்பு.

ஆனால், காலப்போக்கில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க பலம்பெற்று, தற்போது நிலைபெற்றிருக்கிறது.

இதற்கிடையில், தொடர்ந்து அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற குரல் ஒவ்வொரு தரப்பிலிருந்தும் எழுந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமியைத் தவிர, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் அ.தி.மு.க ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன்

அதே நேரம், தற்போது செங்கோட்டையனும் தனி அணியாகப் பிரிகிறாரா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

இந்த நிலையில், சசிகலா தரப்பில் சசிகலாவைத் தவிர மற்றவர்கள் யாரும் மக்களுக்குப் பெரிதாகப் பரிச்சயம் இல்லாமல் இருந்தனர்.

அதில் விதிவிலக்காக வந்தவர் வெண்மதி. சசிகலா செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, அவருடன் இருந்துகொண்டு, அவரின் பேச்சுக்கு உடனடி ரியாக்‌ஷன் கொடுத்துக்கொண்டிருப்பார். இது இயல்பாக நடந்ததால், சமூக ஊடகங்களில் யார் இந்தப் பெண் எனத் தேடல் தொடங்கியது. அதே நேரம், வெண்மதி மீம் கண்டென்ட் ஆனார்.

அதனால் கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் வைரலானார். அப்போதுதான் அவர் நெல்லை மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் இணை செயலாளர் வெண்மதி என்பதும், அ.தி.மு.க பிரிவுக்குப் பிறகு சசிகலாவின் தீவிர ஆதரவாளராக மாறினார் என்பதும் தெரியவந்தது.

சசிகலா திருநெல்வேலி, தென்காசி போன்ற பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதுகூட அவருக்கான ஏற்பாடுகளைச் செய்தவர் வெண்மதி.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாகவே வெண்மதியை சசிகலாவுடன் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து சசிகலாவை சந்திப்பதையும் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது.

சசிகலா வெண்மதி
சசிகலா வெண்மதி

இந்த நிலையில்தான் வெண்மதி தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

அதில், ``நான் மீம்ஸில் வந்தது பெரும் மகிழ்ச்சி அளித்தது. என்றாலும், தேவையற்ற சில மீம்ஸ்களாலும் நானும், என் குடும்பமும் வருந்தினோம்.

அப்போதெல்லாம் சசிகலாதான், இதற்கெல்லாம் கவலைப்படக் கூடாது. விமர்சனங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என ஆறுதல் கூறினார்.

ஆனால், இப்போது நான் சசிகலா அணியில் இல்லை. கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு சசிகலா சிலரால் சூழப்பட்டிருக்கிறார். அதிக நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

சசிகலா
சசிகலா

அதனால், அவரின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் பெரும் அதிருப்தியில் இருந்தேன்.

அதனால், அவரிடமிருந்து விலகிவிட்டேன். சசிகலா கட்சியை ஒருங்கிணைப்பார் என்ற தொண்டர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டார். கட்சியை யார் பிரித்தார்கள் என்பது உலகத்துக்கே தெரியும்.

இனியும் தனிப்பட்ட ஈகோ காரணமாக கட்சியை காப்பாற்றாமல் விடுவது ஆபத்து." எனப் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

டொனால்டு ட்ரம்ப் ஒரு இலுமினாட்டி! - இப்படி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

டொனால்ட் ட்ரம்ப் ஒரு இலுமினாட்டி என்றால் நீங்கள் நம்புவீர்களா? இலுமினாட்டி எனும் சதிகோட்பாட்டை நம்புபவர்கள் கூட ட்ரம்பை இலுமினாட்டி சங்கத்தின் உறுப்பினர் என நம்ப மாட்டார்கள் .எப்படி ட்ரம்பை இலுமினாட்ட... மேலும் பார்க்க

Trump: ``ட்ரம்புக்கு நோபல் பரிசு வேண்டுமாம், இதை செய்தால் கிடைக்கும்" - பிரான்ஸ் அதிபரின் ட்விஸ்ட்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து வரும் போரில், 65000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம் காரணமாக உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் உலக... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன்... ரத்து செய்ய கோரிய நடிகையின் மனு தள்ளுபடி

கடந்த அ தி மு க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கர்ப்பமான தன்னை கட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலையுடன் பேசியது என்ன? - டிடிவி தினகரன் விளக்கம்

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. இந்நிலையில் இன்று (செப். 24) செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ட... மேலும் பார்க்க

கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, செந்தில் பாலாஜி ஷாக்

கொங்கு மண்டலம்தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் என்றால் வியூகங்கள் இருப்பது வழக்கம். அதில் மாற்றுக் கட்சியினரை தங்களின் கட்சிக்கு... மேலும் பார்க்க

எட்டப்ப மன்னர் பற்றி அவதூறு? "சினிமாதானே என விட்டது பின்னாளில்" - எட்டயபுர மன்னர் தலைமையில் கண்டனம்

எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதைக் கண்டித்தும், வரலாற்றுத் தகவல் பிழையை நீக்க வலியுறுத்தியும், உண்மை வரலாறு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை வலியுறு... மேலும் பார்க்க