செய்திகள் :

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 15 வெளிநாட்டவர் கைது! நாடுகடத்த நடவடிக்கை!

post image

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்து வந்த வெளிநாட்டவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புது தில்லியின் துவாரகா பகுதியில், சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்து வந்த வெளிநாட்டவர்கள் 15 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் துவாரகா பகுதியில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில், அங்கு சட்டவிரோதமாக வசித்த 11 நைஜீரியர்கள், 2 ஐவரி கோஸ்ட் குடிமக்கள் மற்றும் வங்கதேசம், தன்சானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தில்லி காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள 15 வெளிநாட்டவர்களும் உரிய ஆவணங்களின்றி தில்லியில் வசித்து வந்ததாகவும், தகுந்த விசாரணைக்கு பின் அவர்கள் நாடு கடத்தப்பட வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகம் அதிகாரியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் சட்ட நடவடிக்கைகளுக்கு பின் தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஹரியாணா: தனியார் நகை கடன் வங்கியின் பூட்டை உடைத்து 7 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் கொள்ளை

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, நெடுந்தூரத்தைக் கடந்து அங்குள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது பா... மேலும் பார்க்க

கேரளத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 5 நோயாளிகள் பலி! என்ன நடந்தது?

கோழிக்கோடு: வட கேரளத்தில் கோழிக்கோடு நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர்.அந்த மருத்துவமனை வளாகத்திலுள்ள ஒரு தனி கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க

பஜ்ரங்தள் தொண்டா் கொலை வழக்கில் 8 பேர் கைது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பஜ்ரங்தள் தொண்டா் சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்துள்ளார். மங்களூரில் வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் சாலையில் பயங்கர ஆ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நிற்க அனுமதி கர்நாடக அமைச்சர் கோரிக்கை!

பாகிஸ்தான் மீதான போருக்கு ஆதரவளிப்பதாக கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ... மேலும் பார்க்க

கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் திரண்டதால் நெரிசல் - கோயில் நிர்வாகம்

பனாஜி: கோவா யூனியன் பிரதேசத்திலுள்ள பிச்சோலிம் பகுதியில் பிரசித்திபெற்ற 'ஸ்ரீ லய்ராயி திருக்கோயில்’ அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஜாத்ரா’ திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் சுற்றுவட... மேலும் பார்க்க