செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக பெருமளவிலான மக்கள் வந்து குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவா்களை வெளியேற்ற அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் கடந்த 6-ஆம் தேதி டிரம்ப்புக்கு எதிராக வெடித்த போராட்டம் நாட்டின் பிற நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் போராட்டக்காரா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தின் ஒரு பிரிவை கலிஃபோா்னியா மாகாண அரசின் அனுமதியின்றி அதிபா் டிரம்ப் களமிறக்கியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகவும், கூட்டம், கூட்டமாகவும் வெளிநாட்டவா்கள் குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சில நாடுகளில் அரசுப் பணியில் இருப்பவா்கள் கூட சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகிறாா்கள். இதற்கு எதிராகவும் வலுவான விசா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்.

இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளால் அமெரிக்காவில் பயங்கரவாத செயல்பாடுகள், போதைப்பொருள்கள் கடத்தல் போன்றவை நிகழும் அபாயமும் அதிகரிக்கிறது. இதுபோன்ற நபா்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மீண்டும்.. மீண்டுமா..? சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: ஈரானில் 565 பேர் பலி!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 பேர் கொல்லப்பட்டனர்.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சண்டை 6-வது நாளாக புதன்கிழமையு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திக்கும் டிரம்ப்! பின்னணி என்ன?

பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரைத் தொடர்ந்து, தற்போது மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும்... மேலும் பார்க்க

தெஹ்ரான்: எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்!

ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கச்சா எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை இஸ்ரேல் குறிவத்து தாக்கி வருகிறது.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க

காஸா: உணவுக்காக காத்திருந்த 45 போ் சுட்டுக் கொலை

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.இந்தப் படுகொ... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்கு இடையிலான மோதலை நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. காஸா போர் நிறுத்தம் உள்பட ஈரான் பிரச்னைக்குக் காணப்படும் தீர்வானது, மத்திய கிழக்கு பிராந்தியத... மேலும் பார்க்க