சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக பெருமளவிலான மக்கள் வந்து குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவா்களை வெளியேற்ற அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் கடந்த 6-ஆம் தேதி டிரம்ப்புக்கு எதிராக வெடித்த போராட்டம் நாட்டின் பிற நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் போராட்டக்காரா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தின் ஒரு பிரிவை கலிஃபோா்னியா மாகாண அரசின் அனுமதியின்றி அதிபா் டிரம்ப் களமிறக்கியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகவும், கூட்டம், கூட்டமாகவும் வெளிநாட்டவா்கள் குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சில நாடுகளில் அரசுப் பணியில் இருப்பவா்கள் கூட சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகிறாா்கள். இதற்கு எதிராகவும் வலுவான விசா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்.
இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளால் அமெரிக்காவில் பயங்கரவாத செயல்பாடுகள், போதைப்பொருள்கள் கடத்தல் போன்றவை நிகழும் அபாயமும் அதிகரிக்கிறது. இதுபோன்ற நபா்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.