செய்திகள் :

சத்தீஸ்கரின் மாவோயிஸ்டுகள் 2 பேர் ஜார்க்கண்டில் சரண்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் 2 பேர் ஜார்க்கண்ட் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்ஜேத் பிர்ஜியா மற்றும் மிதிலேஷ் கொர்பா ஆகிய இரண்டு பேரும், லத்தேஹார் பகுதியில் சோட்டு கார்வார் எனும் மாவோயிஸ்டு தலைவரின் கீழ் செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் ஜார்க்கண்டின் லத்தேஹர் மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரியான குமார் கவுரவ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரி யாதாராம் பன்கர் ஆகியோரின் முன்னிலையில் இன்று (ஏப்.15) சரண்டைந்துள்ளனர். மேலும், சரண்டைந்த முன்னாள் கிளர்ச்சியாளர்கள் இருவருக்கும் மலர் மாலை அணிவித்து அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்றால் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

முன்னதாக, தற்போது சரண்டைந்துள்ள இருவரின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் எனக் கூறப்பட்டுகிறது.

கடந்த சில நாள்களாக சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க