செய்திகள் :

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

post image

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இரண்டு என்கவுன்டர்களில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சமீபத்திய உயிரிழப்புகளுடன், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களான சுதாகர், பாஸ்கர் உட்பட ஏழு நக்சலைட்டுகள் கடந்த மூன்று நாள்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் நடந்து வரும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது ஏழு நக்சல்களின் உடல்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட் தலைவர் சுதாகர், தெலங்கானா மாநிலக் குழு உறுப்பினர் பண்டி பிரகாஷ், தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர் பப்பா ராவ் மற்றும் சில நக்சல்கள் இருப்பது குறித்த தகவல்களின் அடிப்படையில், மாநில காவல்துறையின் சிறப்புப் பணிப் படை மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல்படை, சிஆர்பிஎஃப்-யின் சிறப்புப் பிரிவான கோப்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை ஜூன் 4ஆம் தேதி தொடங்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

கொல்லப்பட்ட ஐந்து நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, அவர்களில் இரண்டு பெண்கள் ஆவார். இந்த நடவடிக்கையில் இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.

மேலும், இந்த நடவடிக்கையின்போது பாம்பு கடி, தேனீ கொட்டுதல், நீரிழப்பு மற்றும் பிற காரணங்களால் பாதுகாப்புப் பணியாளர்கள் சிலர் காயமடைந்துள்ளனர், மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.

ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி ... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளிக்குப் பயணம்!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறாா். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 120 கோடியாக உயா்வு!

இந்தியாவின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.38 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: 2025 ஏப்ரல... மேலும் பார்க்க

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக எஸ்.மகேந்திர தேவ் பதவியேற்பு

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரும் இந்திர காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான எஸ். மகேந்திர தேவ் பதவியேற்றாா். பிரதமருக்கான பொருளாத... மேலும் பார்க்க

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி விமா்சித்தாா். தில்லியில் சனிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் பிரிட்டன் அமைச்சா் ஆதரவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தபோது அவா் பிரிட்ட... மேலும் பார்க்க