செய்திகள் :

சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்!

post image

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில், கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 30 பேர் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில அரசின் நக்சல்களுக்கான மறுவாழ்வு திட்டங்களின் கீழ், தண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (செப். 24) தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கங்களில் செயல்பட்டு வந்த 21 பெண்கள் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சத்தீஸ்கர் காவல் துறையினர் கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடி வந்த 30 நக்சல்களும், இந்தக் குழுவுடன் இணைந்து சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், அதிகப்படியாக 2011 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு, ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பாமன் மத்காம் என்பவர் சரணடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள நக்சல்களுக்கு மாநில அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு

In Chhattisgarh's Dantewada district, 71 Naxals, including 30 wanted with a collective reward of Rs 64 lakh, have surrendered to security forces.

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு உதவிய நபர் கைது!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய ஒருவரை ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்... மேலும் பார்க்க

நான்கு வயதில் தேசிய விருது..! கரவொலியால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த த்ரிஷா தோசர்?

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நான்கு வயதே ஆன சிறுமி ஒருவர் தன்னுடைய முதல் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யார் அந்த சிறுமி என்பதைப் பற்றி பார்க்கலாம்..தில்லியில் உள்ள விக்ஞான் பவனில்... மேலும் பார்க்க

லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர்.கடந்த 2019-இல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கையால்... மேலும் பார்க்க

லடாக்கில் வெடித்த மாபெரும் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 4 பேர் பலி!

லடாக்கில் நடைபெறும் போராட்டத்தில் வெடித்த மோதல்களில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவனையில் சேர்க்க வேண்டு... மேலும் பார்க்க

7,800 தசரா விழாக் குழுக்களுக்கு தலா ரூ.10,000: அரசு நிதியிலிருந்து நன்கொடை!

தசராவையொட்டி சுமார் 7,800 விழாக் குழுக்களுக்கு மாநில அரசு நிதியிலிருந்து தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “க... மேலும் பார்க்க

கொல்கத்தா இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்: ராகுல்

மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கவலை தெரிவித்ததோடு, இயல்பு நிலையை மீட்டெடுக்க மாநில, மத்திய அரசை அவர் வலிய... மேலும் பார்க்க