செய்திகள் :

சத்தீஸ்கர்: மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.40 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பிஜப்பூர் மாவட்டத்திலுள்ள இந்திராவதி தேசிய பூங்காவின் பகுதியில், மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்கள் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதில், மாவோயிஸ்ட் தலைவர் சுதாகர், தெலங்கானா மாநில ஆணைய உறுப்பினர் பண்டி பிரகாஷ், தண்டகாரன்யா சிறப்பு ஆணையத்தின் உறுப்பினர் பாப்பா ராவ் மற்றும் அவர்களது ஆயுதம் ஏந்திய கூட்டாளிகள் ஆகியோரின் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் சிறப்பு அதிரடி படை, மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் சத்தீஸ்கர் மாநில காவல் படை, கோப்ரா படை ஆகிய படையினர் இணைந்து, இன்று (ஜூன் 4) நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவர் கௌதம் என்கிற சுதாகர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது மரணம் குறித்து பாதுகாப்புப் படையினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச்செயலாளர் நம்பலா கேஷவ் ராவ் என்கிற பசவராஜு என்பவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:எத்தனால் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 12 பேர் கைது!

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க