செய்திகள் :

``சந்தேகத்தில் தண்டிக்க முடியாது'' -சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; 20 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் விடுதலை

post image

மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்தில் வசிப்பவர் ரஞ்சித் மானே. இவர் கடந்த 2003-ம் ஆண்டு தன்னுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த லிவ் இன் பார்ட்னரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2004-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் ரஞ்சித்திற்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அத்தண்டனையை மும்பை உயர்நீதிமன்றமும் 2010-ம் ஆண்டு உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து ரஞ்சித் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இம்மனு நீதிபதிகள் அபய் மற்றும் உஜ்ஜால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் ஆயுள் தண்டனை பெற்று 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்து வரும் ரஞ்சித்தை விடுவித்து உத்தரவிட்டனர். இத்தீர்ப்பின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வலுவான சந்தேகம் இருக்கிறது. சந்தேகம் அவர் மீது குற்றமாக சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், சந்தேகம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், தண்டனைக்கு அது ஒன்றை மட்டும் அடிப்படை காரணமாக இருக்க முடியாது. விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது உறவினரிடம் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உத்தரவுகளை வழங்கி இருக்கிறது. நீதிமன்றத்திற்கு வெளியில் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் நம்பகத்தன்மையற்றது என்றும், எனவே அதனை நம்ப முடியாது'' என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்றத்திற்கு வெளியில் கூறப்படும் வாக்குமூலம் பலவீனமான சாட்சியம் என்பதை சுட்டிக்காட்ட பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், அந்த வாக்குமூலம் பிற சாட்சியங்களுடன் ஒத்துப்போகவேண்டும்.

நீதிமன்றத்திற்கு வெளியில் கொடுக்கப்படும் வாக்குமூலம் முரண்பாடு கொண்டதாகவும், நியாயமானதாக தெரியவில்லையெனில் அத்தகைய ஆதாரங்களை கருத்தில் கொள்ளக்கூடாது என்று தெரிவித்தனர். இத்தீர்ப்பையடுத்து கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் ரஞ்சித் சிறையில் இருந்து விடுதலையாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதயத் துடிப்பை நிறுத்திய 4 மாத கரு - ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்

வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறத... மேலும் பார்க்க

மனைவியுடன் பழகுவதைக் கண்டித்த கணவன் கொலை; -ரோட்டில் அரிவாளுடன் குரூப் டான்ஸ் ஆடிய கொலையாளிகள்...

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் சந்துரு. கட்டிடத் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியப்பன் என்பவருடன் தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம். இந்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மக்களை அச்சுறுத்தி தொடர் வழிப்பறி - 2 திருடர்களுக்கு 6 ஆண்டுகள் சிறை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (37). மகாவீர் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). இருவரும் சேர்ந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி வந்தனர்.க... மேலும் பார்க்க

2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை - அரக்கோணம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள ஒருக் கிராமத்தில் கடந்த 30-12-2021 அன்று இரு இளைஞர்கள் சிறுமி ஒருவரைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.இந்த கொடூரம் தொடர்பாக, அரக்கோணம் அனை... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: சிறுமியின் தாய், விசிக மா.செ குற்றவாளிகள் - குற்றப்பத்திரிகை விவரங்கள்

கலவர வழக்குகள்ளக்குறிச்சி, கனியாமூர்கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்க... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `தனியார் பள்ளி கலவர வழக்கில் மாணவின் தாய் குற்றவாளி’ - குற்றப்பத்திரிகை தாக்கல்

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவுசெய்யப்பட்டது. ஆனால... மேலும் பார்க்க