செய்திகள் :

சபரிமலை: 417 கிராம் தங்கம் திருட்டு, 10 பேர் மீது வழக்கு - தேவசம் போர்டு தலைவர் சொல்வதென்ன?

post image

சபரிமலை ஐயப்பன் கோவில் துவாரபாலகர் சிலையில் கவசங்கள் மீது தங்கம் பூசுவதாக கூறி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அதை எடுத்துச் சென்று மோசடி செய்யப்பட்டதாகவும், 2019 ஆகஸ்ட் மாதம் ஐயப்பன் கோயில் கருவறை வாசலில் தங்கம் பதித்ததில் மோசடி நடந்ததாகவும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்தி, ஆறு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை ஐகோர்ட் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு மோசடிகளிலும் வெவ்வேறு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை கருவறை முன் உள்ள துவார பாலகர்கள்
சபரிமலை கருவறை முன் உள்ள துவார பாலகர்கள்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சபரிமலை முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, முன்னாள் திருவாபரண கமிஷனர்கள் பைஜூ, ராதாகிருஷ்ணன், முன்னாள் எக்ஸிகியூட்டிவ் ஆப்பீசர்கள் சுதிஷ்குமார், ராஜேந்திரபிரசாத், அசிஸ்டெண்ட் இன்ஜினியர் சுனில்குமார், முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர்கள் ஸ்ரீகுமார், ராஜேந்திரன் நாயர் ஆகியோருக்கு திருட்டு, கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

இதில் 8-வது இடத்தில் அன்றைய சபரிமலை நிர்வாகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் 474.9 கிராம் தங்கம் திருடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுபற்றி திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"சபரிமலை ஐயப்பன் சுவாமி கோயிலுக்கு சொந்தமான சிறு துண்டு தங்கத்தையும் திருட்டுப்போக விடமாட்டோம். 1998-ம் ஆண்டில் விஜய் மல்லையா வழங்கிய தங்கம் தொடர்பாக விசாரணை நடக்கட்டும். சிறப்பு விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்கட்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெற்ற ஊழியர்களாக இருந்தால், விசாரணை முடிவு வந்ததும் அவர்களின் பென்ஷன் நிறுத்தப்படும் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். சபரிமலை தொடர்பாக மர்மமான கதைகள் கூறுவதற்கு முடிவு ஏற்பட வேண்டும்.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த்
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த்

உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு துவாரபாலகர்களின் தங்க கவசங்களை கொடுத்து அனுப்ப வேண்டும் என்று நான் கூறவில்லை. அப்படியே நான் கொண்டுசெல்லக் கூறியதாக நிரூபித்தால் உடனே ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.

2024-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் தங்க கவசங்களை கொடுத்து அனுப்ப வேண்டாம் என்று தான் நான் கூறினேன்.

அப்போது திருவாபரணம் கமிஷனராக இருந்தவர் வேறு நபர். அவருக்கு ஏற்பட்ட குழப்பம்தான் இதற்கெல்லாம் காரணம். சபரிமலையில் இருந்து எடுத்துச் சென்ற அனைத்து தங்கங்களையும் திரும்ப கொண்டுவருவோம். திருவிதாங்கூர் தேவசம்போர்டோ, அரசோ தவறு செய்தவர்களுக்கு துணை நிற்காது," என்றார்.

விளையாட்டாக கேபிளை இழுத்த சிறுவன்; ட்ரில்லிங் மெஷின் நெற்றியில் துளைத்து பலி - கேரளாவில் சோகம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் மேற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மூத்த மகன் துருவ் நாத்துக்கு இரண்டரை வயது ஆகிறது. ... மேலும் பார்க்க

நாமக்கல்: கிட்னி விற்பனையில் ஈடுபட்ட 2 புரோக்கர்கள் கைது; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்து வந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வி... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசுப் பேருந்தில் சென்ற பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; நடத்துநர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி ஒரத்தநாட்டில் உள்ள தனியார... மேலும் பார்க்க

Uttar Pradesh: சிறையில் காசோலை திருட்டு; விசாரணையில் பகீர் தகவல்; அதிகாரி, கைதிகள் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்ட சிறைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கில் இருந்து சமீபத்தில் ரூ.2.6 லட்சம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதை சிறை அதிகாரி ஆதித்ய குமார் கண்டுபிட... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது; காவல்துறை விசாரணை

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைமேற்கு வங்கத்தில் அடிக்கடி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர் பால... மேலும் பார்க்க

குஜராத்: போலி சம்மன், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.100 கோடி கொள்ளை; தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது

நாடு முழுவதும் அடிக்கடி `டிஜிட்டல் கைது' மூலம் சைபர் கிரிமினல் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழு... மேலும் பார்க்க