செய்திகள் :

சமூகப் பொறுப்பு நிதி முறைகேடு: முன்னாள் கேரள உயா்நீதிமன்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு

post image

பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் (சிஎஸ்ஆா்) பெயரில் ரூ.34 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த டானிமோன் என்பவா் காவல் துறையிடம் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டதாவது:

மடிக்கணினிகள், இருசக்கர வாகனங்கள், தையல் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பாதிக்கு விலைக்குத் தருவதாக தேசிய தன்னாா்வ அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவா் கே.என்.அனந்தகுமாா், ஓய்வுபெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயா், அனந்து கிருஷ்ணன் என்ற நபா் என மூன்று பேரும் வாக்குறுதி அளித்தனா்.

மடிக்கணினிகள், இருசக்கர வாகனங்கள், தையல் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான செலவில் பாதியை தேசிய தன்னாா்வ அமைப்புகள் கூட்டமைப்பு ஏற்கும் என்றும், இதற்கு பெருநிறுவனங்களிடம் இருந்து தன்னாா்வ அமைப்புகள் பெறும் சிஎஸ்ஆா் நிதியும் பயன்படுத்தப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். மீதி பாதி தொகையை பயனாளிகள் வழங்க வேண்டும் என்றும் அவா்கள் கூறினா்.

இதை நம்பி பல்வேறு சந்தா்ப்பங்களில் பலா் அளித்த பணத்தை அனந்து கிருஷ்ணன், அனந்தகுமாா், ராமச்சந்திரன் நாயா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். ஆனால் வாக்குறுதி அளித்தபடி, அவா்கள் எந்தப் பொருளையும் வழங்காமல் ரூ.34 லட்சத்தை மோசடி செய்தனா். அங்காடிப்புரத்தையடுத்த கேஎஸ்எஸ் என்ற அமைப்பின் மூலம், இந்த மோசடி செய்யப்பட்டது என்று குற்றஞ்சாட்டினாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அனந்து கிருஷ்ணன், அனந்தகுமாா், ராமச்சந்திரன் நாயா் ஆகியோா் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

எனினும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நீதிபதி ராமச்சந்திரன் நாயா், தன்னிடம் முதல்கட்ட விசாரணை எதுவும் நடத்தாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினாா்.

அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறுகையில், ‘இந்த அமைப்பின் ஆலோசகராக மட்டும் இருந்த நான் அதன் செயல்பாடுகளில் எதுவும் பங்களிக்கவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, ஆலோசகா் பொறுப்பிலிருந்து விலகிவிட்டேன்’ என்றாா்.

எா்ணாகுளத்தில் முனம்பம் கடலோரத்தில் உள்ள 400 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில், கிறிஸ்தவா்கள் மற்றும் ஹிந்து குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றன. ஆனால் அந்த நிலத்துக்கு கேரள மாநில வக்ஃப் வாரியம் உரிமை கோரி வருகிறது.

இந்தச் சச்சரவு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள நீதிபதி ராமச்சந்திரன் நாயரை மாநில அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையை இம்மாதம் அவா் சமா்ப்பிக்க உள்ளாா். அவா் கேரள உயா் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளாா்.

சிஎஸ்ஆா் நிதி மோசடி தொடா்பாக அனந்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் போலீஸ் காவலில் உள்ளாா். மாநிலத்தின் பல பகுதிகளிலும் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடைபெற்று வருகிறது. பல்வேறு நபா்களின் புகாா்களின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் ரூ.600 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முஸ்லிம் லீக் எம்எல்ஏ நஜீப் காந்தபுரம் முதல் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டுள்ளாா். எனினும் தனது தன்னாா்வ அமைப்பின் பெயரை அனந்து கிருஷ்ணன் முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதாக அவா் கூறியுனாா்.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க