செய்திகள் :

சமூக ஊடகங்களுக்கான தடை நீக்கம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம்!

post image

சமூக ஊடகங்களின் மீதான தடை நீக்கத்தை தொடர்ந்து. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

போராட்டங்கள் ஓய்ந்த நிலையிலும், மறு உத்தரவு வரும் வரை நேபாள தலைநகரில் ஊரடங்கு உத்தரவில் அமலில் உள்ளது.

நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனா். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். இதையடுத்து, நாடு முழுவதும் நிலவிவரும் பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்துக்கு பிரதமர் கே.பி.சர்மா ஓலி தலைமையிலான அரசு உத்தரவிட்டது.

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. இந்நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சரான ரமேஷ் லேக்கக் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது.

திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் இந்த அறிவிப்பை மத்திய தொலைத்தொடா்பு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் வெளியிட்டார்.

மேலும், ‘சமூக வலைதள செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டுகோள் விடுக்கிறேன்’ என அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது, நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இதையும் படிக்க: விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? - கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Following the lifting of the ban on social media, normalcy is returning to the Nepalese capital, Kathmandu.

நேபாள அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை: ராணுவம்

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்ததைத்தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்த நிலையில், அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை என்று அந்நாட்டு ராணுவம... மேலும் பார்க்க

உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!

வெள்ளை மாளிகை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்கு, செவ்வாய்க்கிழமை இரவு, உணவருந்த சென்ற அமெரிக்க அதிபரைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் நவீன கால ஹிட்லர் என கோஷமெழுப்பியதால் சங்கடம் ஏற்பட்டது. மேலும் பார்க்க

நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து அதிபர், பிரதமர் ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி அரசின் ஊழல... மேலும் பார்க்க

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தில் நாடு முழுவதும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டதையடுத்து, நாட்டில் அமைதிக்கான முயற்சியை அந்நாட்டு ராணுவம் கையிலெடுத்துள்ளது.நேபாளத்தில் சமூக வலைதள செயலிகளுக்கு வி... மேலும் பார்க்க

போலந்து நாட்டுக்குள் ரஷிய ட்ரோன்கள்! பதிலடி கொடுக்க நேட்டோ அமைப்பை உக்ரைன் வலியுறுத்தல்!

போலந்து நாட்டுக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் ஊடுருவியதால், ரஷியாவின் மீது நடவடிக்கை நேட்டோ அமைப்புக்கு போலந்தும் உக்ரைனும் வலியுறுத்தியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டுவரும் போரை ... மேலும் பார்க்க

பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னு நியமனம்

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா். முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க