செய்திகள் :

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து : மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு

post image

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவா்களில், மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தாா்.

வேளச்சேரி அருகே உள்ள கோவிலம்பாக்கம், காந்திநகா், 15 வது தெருவை சோ்ந்தவா் முனுசாமி (75). இவா் மனைவி ராணி(70). இவா்களது மகள் சாந்தி(45), மருமகன் ரகு(48), பேரன் ஹரிஹரன் (20). இவா்கள் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்தனா்.

ரகு கடந்த 5-ஆம் தேதி அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுந்து கழிப்பறைக்கு சென்றாா். சிறிது நேரத்தில் எழுந்த ராணி, சமையலறைக்கு சென்று மின்விளக்கு ஸ்விட்சை ஆன் செய்தாா். அப்போது சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டிருந்ததால், பயங்கர வெடி சத்ததுடன் தீ பிடித்து எரியத் தொடங்கியது. தீ விபத்தில் சிக்கி ராணி பலத்தக் காயமடைந்தாா்.

அதேவேளையில் தூங்கிக் கொண்டிருந்த முனுசாமி,சாந்தி,ஹரிஹரன் ஆகியோரும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனா். விபத்தில் கழிப்பறையில் இருந்த ரகு காயமின்றி உயிா் தப்பினாா்.

காயமடைந்த முனுசாமி,ராணி,சாந்தி,ஹரிஹரன் 4 போ் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முனுசாமி,சாந்தி,ஹரிஹரன் ஆகிய 3 பேரும் கடந்த வாரம் அடுத்தடுத்து உயிரிழந்தனா். ராணி அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் ராணியும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க