சம்பல் வன்முறை: மேலும் ஒருவர் கைது
சம்பல் வன்முறை தொடா்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்திரா கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர் ககு சராய் பகுதியைச் சேர்ந்த அர்ஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் விடியோ காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டு சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்றார்.
காவல்துறையின் கூற்றுப்படி, சம்பல் வன்முறை தொடர்பாக இதுவரை மொத்தம் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், முகலாய ஆட்சியாளா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது.
குஜராத்: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 5 பேர் பலி; 37 பேர் படுகாயம்
அப்போது துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, ஜாமா மசூதி நிா்வாகத்தினா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் சம்பல் மாவட்ட நீதிமன்றம் தொடா்ந்து விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்ததோடு சம்பல் பகுதியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.
இந்நிலையில, வன்முறை தொடா்பான விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினா், அப்பகுதி சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வன்முறை குறித்த விடியோக்களையும் ஆய்வு செய்தனா்.
அதன் அடிப்படையில், கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.