செய்திகள் :

தூத்துக்குடி: பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய கடன்; ஜப்தி செய்யப்பட்ட வீடு; விஷம் குடித்த தம்பதிகள்

post image

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மனைவி பத்ரகாளி. லாரி டிரைவரான சங்கரன், தனக்குச் சொந்தமான வீட்டை அடகு வைத்து, தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனுக்காக மாதந்தோறும் தவணையாக ரூ.11 ஆயிரம் கட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகத் தவணைத் தொகையைச் செலுத்தாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பைனான்ஸ் நிறுவனத்தினர் பணத்தைச் செலுத்தும்படி நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என பைனான்ஸ் நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஜப்தி செய்யப்பட்ட வீடு
ஜப்தி செய்யப்பட்ட வீடு

தவணைத் தொகை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுகிர் முன்னிலையில் முறப்பநாடு காவல் நிலைய போலீஸார்வ் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், வழக்கறிஞர்கள் சங்கரனின் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர். ஜப்தி செய்ய வந்தவர்கள் சங்கரன் மற்றும் அவரது மனைவி பத்ரகாளியையும் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். அப்போது வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து வெளியே வந்துள்ளார் பத்ரகாளி. அவர்கள் வெளியே வந்ததும் ஊழியர்கள் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்து வைத்தனர்.

இதற்கிடையில் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தைப் பத்ரகாளி குடித்தார். அப்போது போலீஸார் பூச்சி மருந்து பாட்டிலை கீழே தட்டி விட்டனர். கீழே விழுந்து கிடந்த பூச்சி மருந்தை எடுத்து சங்கரன் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சங்கரன் மயங்கி விழுந்துள்ளார். வாயில் நுரை தள்ளிய நிலையில் சங்கரன் தவித்தபோது, அவர் நடிப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். விஷம் குடித்த இருவரும் சுமார் 45 நிமிடம் அங்கே தவித்துள்ளனர். இருப்பினும், போலீஸார் முன்னிலையில் வீட்டுக்குச் சீல் வைக்கப்பட்டது. சங்கரன் வீட்டில் வளர்த்த மூன்று நாய்களும் வீட்டை விட்டு வெளியே வர மறுத்தது. உடனே அங்கிருந்த பணியாளர்கள் 3 நாய்களையும் உள்ளே வைத்து அடைத்து வீட்டைச் சீல் வைத்து விட்டுச் சென்றனர்.

நாய்களுடன் வைக்கப்பட்ட சீல்
நாய்களுடன் வைக்கப்பட்ட சீல்

மூன்று நாய்களும் உணவருந்த முடியாமல் வீட்டிற்குள் குரைத்துக் கொண்டிருந்தன. இதற்கிடையே, விஷம் குடித்த இருவரின் நிலை மோசமானதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சங்கரன் உயிரிழந்தார். பத்திரகாளிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தம்பதிக்கு 12-ம் வகுப்பு படிக்கும் பானு என்ற மகளும், 10-ம் வகுப்பு படிக்கும் கல்யாணி என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஜகபர் அலி கொலை வழக்கு: உடல் தோண்டி எடுக்கப்பட்டு எக்ஸ்ரே எடுப்பு; போலீஸ் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த விபரீதம்; மனைவியைக் கொன்ற இளைஞர்; திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா (வயது 31) என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், வெங்கடேஷுக்கு ... மேலும் பார்க்க

வேங்கைவயல்: "மலம் கலந்த நீரை யாரும் பருகவில்லை" - நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

வேங்கை வயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட புகார் தொடர்பான வழக்கு இரண்டாவது முறை... மேலும் பார்க்க

சென்னை: ஈ.சி.ஆரில் பெண்களை காரில் துரத்திய இளைஞர்களின் பகீர் பின்னணி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் பயணித்த காரை தி.மு.க கொடி கட்டிய கார் ஒன்றும் இன்னொரு காரும் விரட்டியது. அதனால் அத... மேலும் பார்க்க

கும்பகோணம்: கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி; குப்பை தொட்டியில் வீசியதால் அதிர்ச்சி...

கும்பகோணம், நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணி பெண்களை போல் வயிறு பெரிதாக இர... மேலும் பார்க்க

“ECR விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அதிமுகவைச் சேர்ந்தவர்" - ஆர்.எஸ்.பாரதி சொல்வதென்ன?

சென்னை ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்ற நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.சென்னை ஈ.சி.ஆர். சாலையில், கா... மேலும் பார்க்க