செய்திகள் :

மிகவும் சிறப்பான தருணம்... உலகக் கோப்பையை வென்றது குறித்து மனம் திறந்த இந்திய கேப்டன்!

post image

இந்திய அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மிகவும் சிறப்பான தருணம் என இந்திய அணியின் கேப்டன் நிகி பிரசாத் தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் மலேசியாவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்

சிறப்பான தருணம்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிறப்பான தருணம் என இந்திய அணியின் கேப்டன் நிகி பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் அனைவரும் அமைதியாகவும், நிதானமாகவும் செல்பட முயற்சி செய்தோம். எங்களது வேலையை சரியாக செய்தோம். ஆடுகளத்தில் களமிறங்கி எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளோம். எங்களுக்கு அனைத்து சிறந்த வசதிகளையும் செய்து கொடுத்த பிசிசிஐ-க்கு மிக்க நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று உயரத்தில் இருக்கிறது. இது மிகவும் சிறப்பான தருணம் என்றார்.

இதையும் படிக்க: சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான அறிமுக டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணே மைதானத்தில் நேற்று முன் தி... மேலும் பார்க்க

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் மீண்டும் முகமது ஷமி!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மை... மேலும் பார்க்க

ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அ... மேலும் பார்க்க

யு19 மகளிர் உலகக்கோப்பை- இந்தியா சாம்பியன்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியா வென்று அசத்தியுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைப... மேலும் பார்க்க

யு19 மகளிர் கிரிக்கெட்- இந்தியாவுக்கு 83 ரன்கள் இலக்கு

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 83 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியி... மேலும் பார்க்க

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கினார்.51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள்... மேலும் பார்க்க