செய்திகள் :

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

post image

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேரத்தில் சம்பளம் கொடுப்பது கிடையாது என்ற புகார் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து இழுத்தடித்து கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரு மாத சம்பளத்தை கொடுக்காமல் மொகத்தை இயக்குநர் மணீஷ் வேலையில் இருந்து நீக்கிவிட்டார். சம்பவத்தன்று சம்பள பாக்கியை வாங்குவதற்காக மொகமத் இயக்குனரின் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சம்பள பாக்கியை கொடுக்கும்படி கேட்டதற்கு மீண்டும் வேலையில் சேர்ந்தால்தான் சம்பளத்தை கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறை

இதனால் வேறு வழியில்லாமல் மொகமத் மீண்டும் வேலையில் சேர்ந்துள்ளார். அப்படி இருந்தும் மணீஷ் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். சம்பவத்தன்று மணீஷ் அலுவலகத்தில் இருந்தபோது மொகமத் தனது பாக்கி சம்பளத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் மணீஷ் டிரைவரை கண்டபடி திட்டியுள்ளார். அதோடு சம்பளத்தை கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் டிரைவர் மொகமத் இயக்குநரை எதிர்த்து பேசியிருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த சமையல் அறையில் கிடந்த கத்தியை எடுத்து மொகமத்தை மணீஷ் குத்திவிட்டார்.

உடனே மொகமத் ரத்தம் சொட்ட சொட்ட அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்தார். அதனை பார்த்த அக்கட்டட வாட்ச்மென் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதோடு அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை இயக்குநர் கைது செய்யப்படவில்லை.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீவிர சிகிச்சையில் மகன்; என்ன நடந்தது?

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி.இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குட... மேலும் பார்க்க

சென்னை: அரசு வேலைக்குப் போலி நியமன ஆர்டர்; 12 பேரிடம் ரூ.1,66,36,000 மோசடி செய்த கும்பல் கைது

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயற்சி; 70 கிலோ பறிமுதல்; காருடன் 6 பேர் கைது; பின்னணி என்ன?

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.கடந்த சில நாள்களுக்கு முன் இலங்... மேலும் பார்க்க

ஆம்பூர்: கோயில் தூய்மைப் பணிக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல் - அர்ச்சகர் மீது வழக்கு பதிவு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகநாதசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; கண்டித்த கணவர் - கோபத்தில் மகளை கொன்று தாயும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத... மேலும் பார்க்க

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க