செய்திகள் :

சம்மனை பூஜை அறையிலா மாட்ட முடியும்? சீமான் கேள்வி

post image

தர்மபுரி: காவல்துறை அளிக்கும் சம்மனை கிழிக்காமல், பூஜை அறையிலா மாட்ட முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் கீழ் காவல்துறையினர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், தர்மபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சீமான்.

அப்போது அவர் பேசுகையில், கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்று தேர்தலில் போட்டியிட்டு பார்க்கலாம். 2026ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து நின்று வென்று காட்டுவோம் என சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு ஆண்டுக்குள் 6 முறை கருக்கலைப்பு செய்தது நானாகத்தான் இருக்கும். அதுவும் சிறைக்குள் இருந்துகொண்டே கருக்கலைப்பு செய்திருக்கிறேன்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் வரும் ஆட்சி மாறும் என்பதை காவல்துறை மனதில் வைக்க வேண்டும்.

சம்மனை கிழிக்காமல், காவல்துறை அளித்த சம்மனை பூஜை அறையிலா மாட்ட முடியும்? என்றும் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

காலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவுக்கு என்ன நடந்தது? சம்மனை கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? சம்மனை கிழிப்பதும் கிழிக்காமல் இருப்பதும் எங்கள் விருப்பம். விசாரணைக்கு வர மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லையே. வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும், சம்மனை வீட்டில் ஒட்டச் சென்றது ஏன்?

விருப்பமில்லாத பெண்ணை நான் பாலியல் வன்கொடுமை செய்தது போல பேசுகிறார்கள். என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்தப் பெண்ணை அழைத்து வருகிறது. அந்தப் பெண் பாலியல் புகார் கூறினால் குற்றமாகி விடுமா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை ஆட்சியரு... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ள் தளப் பதிவில், சீர்காழியில், மூன்றரை... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மு.க.அழகிரி சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அண்ணன் மு.க.அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் ஸ்டா... மேலும் பார்க்க

கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை: சீமான்

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சேலத்தில் இருந்து விமானத்தில் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில்... மேலும் பார்க்க

நிதிப் பகிர்வைக் குறைக்கும் மத்திய அரசு? ராமதாஸ் கண்டனம்!

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களையடுத்து, மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பகிர்வினை 41 சதவிகிதத்திலிருந... மேலும் பார்க்க

'கலெக்டர், எஸ்.பி. நான் சொல்றததான் கேட்கணும்' - தருமபுரி திமுக மாவட்டப் பொறுப்பாளர் பேச்சு

மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அதற்கு கீழ் உள்ள அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி ... மேலும் பார்க்க