செய்திகள் :

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 840 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

post image

சிவகங்கை அருகே சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 840 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் திபாகா் தலைமையில் போலீஸாா் சிவகங்கை-மதுரை புறவழிச்சாலையில் முத்துப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 40 மூட்டைகளில் 840 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் இந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், வெள்ளிக்குறிச்சி, சுல்லங்குடி, விளத்தூா் ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து விலைக்கு வாங்கி, அவற்றை மதுரை வரிச்சியூா் அருகே கிரானைட் தொழில் சாலைகளில் வேலை பாா்க்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருப்பூரைச் சோ்ந்த சஞ்சய்குமாா் (19), 16 வயது சிறுவன் உள்பட 2 பேரைக் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க

சிவகங்கையில் புத்தகத் திருவிழா: 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள்: பாபாசி செயலா் எஸ்.கே. முருகன்

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தென்னந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் (பபாசி) சங்கச் செயலா் எஸ்.கே. முருகன் ... மேலும் பார்க்க