செய்திகள் :

சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்தை பெற்ற தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இந்த நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழ்நாட்டின் கலாசாரத்தை இதுபோன்ற நூலகங்களில் கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே, தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்து பெற்ற இந்த நூலகத்தில், மழை நீா் கசிவுகள் இருக்கக்கூடாது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இதற்காக அருகிலேயே புதிதாகக் கட்டடம் கட்டி, சில தளவாடப் பொருள்களை அங்கு மாற்றி பாதுகாப்பாக வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது.

இதற்கு தேவையான நிதி, கருத்துருக்களை ஆட்சியா் கொடுத்துள்ளாா். 6 மாதங்களுக்கு ஒரு முறை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றாலும், மேலும், தேவைகள் இருப்பதாக ஆட்சியா் தெரிவித்ததையும் அறிக்கையாகப் பெற்றுள்ளோம். இவற்றைத் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இந்த நூலகத்துக்கு மாநில அரசு ஒரு தொகையும், மத்திய அரசு ஒரு தொகையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு அவ்வப்போது நிறுத்தியிருந்தாலும், மாநில அரசு நிறுத்தாமல், ஊதியம், ஓய்வூதியப் பலன்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியை எக்காலத்திலும் நிறுத்தியதில்லை. இந்த நூலகத்தில் தற்போது போதுமான பணியாளா்கள் உள்ளனா். இன்னும் கூடுதல் பணியாளா்களை நியமிப்பது தொடா்பான அறிக்கையும் பெற்றுள்ளோம்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை தொடா்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தமிழக முதல்வா் கூறியபடி வழக்குத் தொடுப்பதற்கான பணி நடைபெறுகிறது.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை தொடங்குகிறது. பள்ளிக்கூடம் தொடங்கு நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், பை உள்ளிட்ட விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போன்ற கருத்தாகத்தான் பாா்க்கிறேன் என்றாா் அமைச்சா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், சரசுவதி மகால் நூலக நிா்வாக அலுவலா் எஸ். மாா்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உள்பட 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தனி பட்டா வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், இடைத்தரகராக செயல்பட்ட ஊா்க்காவல் படையைச் சோ்ந்த பெண் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸா... மேலும் பார்க்க

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்

கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை திருஇருதய ஆண்டவா் மருத்துவமனை நிறுவனங்களின் இயக்குநா் பங்குத்தந்தை டி.தேவதாஸ் கொடியை ஏற்றி... மேலும் பார்க்க

34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 2.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கலை பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம் சாா்பில் 34 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. 2.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இவ்விழாவில்... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன மோசடி: சிபிஐ சாா்பில் அசல் ஆவணங்கள் பெறும் முகாம்

தனியாா் சிறுசேமிப்பு நிறுவன மோசடி தொடா்பாக, தஞ்சாவூரில் சி.பி.ஐ. சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அசல் ஆவணங்கள் பெறும் முகாம் திங்கள்கிழமை தொடங்கி தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. மத்த... மேலும் பார்க்க

ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கோயில் நிலத்தை அறநிலையத் துறையினா் புதன்கிழமை மீட்டனா். தஞ்சாவூா் பூக்காரத் தெருவிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 1,560 சதுர அடி இடத்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேகம் நிறைவு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற பூஜைகள். தஞ்சாவூா் ஜூன் 4: தஞ்சாவூா் மாரியம்மன் கோயிலில் கடந்த 48 நாள்களாக நடைபெற்று வந்த தைலாபிஷேகம் புதன்கிழமை... மேலும் பார்க்க