செய்திகள் :

சரியாகப் படிக்கவில்லை.. மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை!

post image

ஆந்திர மாநிலத்தில் சரியாகக் கல்வி கற்காத இரு மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வி. சந்திர கிஷோர் - ராணி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் இருந்தனர். 37 வயதாகும் சந்திர கிஷோர் ஓஎன்ஜிசியில் பணியாற்றும் ஊழியராவார். இவர்களது மகன்கள் இருவரும் கல்வியில் மிகவும் மோசமான நிலையிலிருந்ததாக தொடர்ந்து வருத்தமடைந்து வந்தார். கல்வி இல்லையெனில் போட்டி நிறைந்த உலகை எப்படி எதிர்கொள்ள முடியும் எனக் கவலையில் ஆழ்ந்தார்.

இந்த கவலை நாளடைவில் கடும் கோபமாக மாறியது. ஒருகட்டத்தில் மிகுந்த ஆத்திரமடைந்த கிஷோர் வெள்ளிக்கிழமையான நேற்று காலை 10 மணியளவில் தனது இரு மகன்களையும் தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் மூழ்கடித்துக் கொலை செய்தார். பின்னர் கிஷோர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக கிஷோரின் மனைவி ராணி காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்பு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலை செய்துகொண்ட இடத்தில் ஒரு கடிதமும் மீட்கப்பட்டது. அதுதொடர்பாக தடயவியல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

உ.பி: படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் 16 பேருடன் சென்ற படகு சனிக்கிழமை கவிழ்ந்தது.... மேலும் பார்க்க

தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு: 6 மாதக் குழந்தை பார்வை இழந்த பரிதாபம்!

மத்திய பிரதேசத்தில் 6 மாதக் குழந்தையை தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 13ல் கோலாரஸ் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் இந்த அதிர... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களின் மையமாகும் ஹம்பி! வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

பெங்களூரு : கர்நாடகத்தில் வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் மீண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹம்பியில் கடந்த வாரம் நடைபெற்ற ‘ஹம்பி திருவிழாவைக்’... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்தியரான கொலம்பிய பல்கலைக்கழக மாணவியின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இளநிலை படிப்பை அகமதாபாத் சிஇபிடி பல்கல... மேலும் பார்க்க

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்!

பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது வெளியுறவு அமைச்சர் விஜிதா... மேலும் பார்க்க

பாப்கார்னை தொடர்ந்து அதிக வரி விதிப்பில் டோனட்கள்: காங்கிரஸ்

பாப்கார்னுக்கு அடுத்தப்படியாக டோனட்கள் அதிக வரி விதிப்புக்குள்ளாகியிருப்பதாக காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ராமேஷ் எக்ஸ் தளத்தில்..சிங்கப்பூரைத் தளமாகக... மேலும் பார்க்க