செய்திகள் :

சரியாகப் படிக்கவில்லை.. மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை!

post image

ஆந்திர மாநிலத்தில் சரியாகக் கல்வி கற்காத இரு மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வி. சந்திர கிஷோர் - ராணி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் இருந்தனர். 37 வயதாகும் சந்திர கிஷோர் ஓஎன்ஜிசியில் பணியாற்றும் ஊழியராவார். இவர்களது மகன்கள் இருவரும் கல்வியில் மிகவும் மோசமான நிலையிலிருந்ததாக தொடர்ந்து வருத்தமடைந்து வந்தார். கல்வி இல்லையெனில் போட்டி நிறைந்த உலகை எப்படி எதிர்கொள்ள முடியும் எனக் கவலையில் ஆழ்ந்தார்.

இந்த கவலை நாளடைவில் கடும் கோபமாக மாறியது. ஒருகட்டத்தில் மிகுந்த ஆத்திரமடைந்த கிஷோர் வெள்ளிக்கிழமையான நேற்று காலை 10 மணியளவில் தனது இரு மகன்களையும் தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் மூழ்கடித்துக் கொலை செய்தார். பின்னர் கிஷோர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக கிஷோரின் மனைவி ராணி காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்பு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலை செய்துகொண்ட இடத்தில் ஒரு கடிதமும் மீட்கப்பட்டது. அதுதொடர்பாக தடயவியல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தங்கம் கடத்தல்: விசாரணையில் அடித்து துன்புறுத்தப்பட்டேன்! -நடிகை ரன்யா ராவ்

தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையில் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக காவல் துறை அதிகாரிகள் மீது நடிகை ரன்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடு... மேலும் பார்க்க

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி!

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் எப்போதும் வைக்கப்படும். ராகுல் உள்நாட்டு... மேலும் பார்க்க

பஞ்சாபில் கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டு வீச்சு

அமிர்தசரஸில் உள்ள கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள தாகுர்த்வாரா கோயில் மீது சனிக்கிழமை அதிகாலை இரு... மேலும் பார்க்க

உ.பி: படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் 16 பேருடன் சென்ற படகு சனிக்கிழமை கவிழ்ந்தது.... மேலும் பார்க்க

தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு: 6 மாதக் குழந்தை பார்வை இழந்த பரிதாபம்!

மத்திய பிரதேசத்தில் 6 மாதக் குழந்தையை தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 13ல் கோலாரஸ் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் இந்த அதிர... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களின் மையமாகும் ஹம்பி! வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

பெங்களூரு : கர்நாடகத்தில் வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் மீண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹம்பியில் கடந்த வாரம் நடைபெற்ற ‘ஹம்பி திருவிழாவைக்’... மேலும் பார்க்க