செய்திகள் :

சரிவுடன் வர்த்தமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

post image

பங்குச் சந்தை இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,869.47 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.53 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 212.71 புள்ளிகள் குறைந்து 81,583.44 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக 400 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 70.65 புள்ளிகள் குறைந்து 24,875.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி லைஃப், என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

சன் பார்மா, எட்டர்னல், ஓஎன்ஜிசி, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

ஆசிய பங்குச்சந்தைகளில் சீனாவின் ஹாங்காங் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில் தென் கொரியா, ஜப்பான், ஷாங்காய் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

இதையும் படிக்க | கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: மருந்து மீதான இறக்குமதி மீது அமெரிக்கா வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், மருந்து நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மிகுந்த அழுத... மேலும் பார்க்க

ரூ.4100 கோடி அதிவேக ரயில் ஒப்பந்தத்தை வென்ற சீமென்ஸ்!

புதுதில்லி: இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான நேஷனல் ஹை ஸ்பீட் ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.4,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை சீமென்ஸ் பெற்றுள்ளத... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன்களில் இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்குமா? அறிமுகமாகிறது போக்கோ எஃப் 7

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. போக்கோ எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 24ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. ரி... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் நோர்டு 5, நோர்டு சிஇ 5 அறிமுகமாகும் தேதி தெரியுமா?

ஒன்பிளஸ் நோர்டு 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் அறிவிப்பின்படி, ஜூலை 8ஆம் தேதி இரு ஸ்மார்ட்போன்களும்... மேலும் பார்க்க

இஸ்ரேல்–ஈரான் மோதல்: பங்குச் சந்தை சரிவுடன் முடிவு!

மும்பை: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தது நேற்று பங்குகளை வாங்கியதால், நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தை வெகுவாக உயர்ந... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் புதிய உச்சம் தொட்ட நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 74,560-க்கு விற்... மேலும் பார்க்க