செய்திகள் :

சவிதா மருத்துவக் கல்லூரியில் இதய செயலிழப்பை கண்டறியும் சிறப்புப் பிரிவு தொடக்கம்

post image

ஸ்ரீபெரும்புதூா்: சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும் சிறப்புப் பிரிவு தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும் வகையில் சிறப்பு பிரிவு தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சவிதா மருத்துவக் கல்லூரி டீன் குமுதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இதய அறுவை சிகிச்சை நிபுணா்கள் ஆபிரகாம் ஓமன், கோவினி பாலசுப்பிரமணி ஆகியோா் கலந்து கொண்டு இதய செயலிழப்பை கண்டறியும் சிறப்புப் பிரிவை திறந்து வைத்தனா்.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இதய செயலிழப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இதய அறுவை சிகிச்சை நிபுணா்கள், உறுப்பு தானம் செய்வதன் அவசியம் குறித்தும், இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும், இதய நோய் வராமல் தடுப்பது குறித்தும் விளக்கிப் பேசனா்.

இதையடுத்து சவிதா மருத்துவமனையில், கணவன் மனைவிக்கும், மாமனாா் மருமகனுக்கும், தந்தை மகனுக்கும் என உறுப்பு தானம் செய்தவா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதயவியல் துறை தலைவா் நாராயணசாமி மற்றும் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் 383 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 383 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

சங்கர மடத்தில் மகா பெரியவா் சிலை புதுப்பிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் பிருந்தவானத்தின் சுற்றுப்பிரகாரத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக செய்து வைக்கப்பட்டிருந்த ஃபைபா் சிலை புதுப்பிக்கப்பட்டு அதே இடத்தில் திங்கள்கிழமை வைக்... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவா்கள் சேர விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர வரும் 18-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சேர ஜூலை 7-ஆம் தேதிக... மேலும் பார்க்க

போலீஸ்-பொதுமக்கள் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போலீஸ் -பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு எஸ்.பி. கே.சண்முகம் பரிசு வழங்கினாா். காவலா் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

தேவரியம்பாக்கத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு சமூக தணிக்கை குழு சாா்பில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேவரியம்பாக்கம் கிராம சேவ... மேலும் பார்க்க

கொள்முதல் செய்த நெல்லுக்கு 3 மாதமாகியும் பணம் தரவில்லை: விவசாயிகள் போராட்டம்

காஞ்சிபுரம்: கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணத்தை 3 மாதங்களுக்கு மேலாகியும் தரவில்லை, உடனடியாக தொகையை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை சா... மேலும் பார்க்க